Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தஞ்சை பெரிய கோயிலுக்கு வெளியே இருக்கும் ராஜராஜ சோழன் சிலை.. உள்ளே வைப்பதை எது தடுக்கிறது! வைரமுத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜராஜ சோழனின் சதய விழா மங்கல இசையுடன் கோலாகலமாக இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து, ராஜராஜ சோழன் சிலையை தஞ்சை பெரிய கோயில் வளகத்திற்குள் வைப்பதை எது தடுக்கிறது என பேசியிருந்தார். தற்போது அதனை கவிதை வடிவில் தனது எக்ஸ் தளத்தில் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். அதேபோல, ராஜராஜ சோழன் மன்னராக முடிசூட்டியதும் ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில்தான். பிறந்த நாளையும், முடிசூடிய நாளையும் ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது.

vairamuthu rajaraja cholan satayavizha

அதன்படி, இந்த ஆண்டும் ராஜராஜ சோழனின் 1039 ஆம் ஆண்டு சதய விழா மங்கல இசையுடன் கோலாகலமாக இரண்டு நாட்கள் நடைபெற்றது. இரண்டு நாட்கள் வெகு விமர்சையாக இந்த விழா நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் தமிழ் அறிஞர்களுக்கு ராஜராஜன் விருது, தேவார நாயகம் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ராஜராஜ சோழன் சிலையை தஞ்சை பெரிய கோயில் வளகத்திற்குள் வைப்பதை எது தடுக்கிறது என பேசியிருந்தார். இந்த நிலையில், விழாவில் பேசியதை கவிதை வடிவில் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். வைரமுத்து கூறியதாவது:-

vairamuthu rajaraja cholan satayavizha

மாமன்னன் ராசராசனின் 1039ஆம் சதயப் பெருவிழா தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் நிகழ்ந்தது. பங்குபெற்றேன். தமிழர்களின் கலைச்சின்னம் இது என்ற வரலாற்றுப் பரவசமும் வாள் வினையால் அகண்ட தமிழகம் கண்ட பேரரசனின் பேரன் என்ற பெருமிதமும் என்னைப் பேசவைத்தன. ஆலயம் எழுப்பிய அரசர்க்கரசனின் சிலை ஆலயத்துக்கு அகத்தே இல்லாமல் புறத்தே நிறுவப்பட்டிருப்பது கண்டு தமிழ் இதயங்களில் குருதி கசிகிறது, அறச் சீற்றத்தோடு பேசினேன்:

"ஆலய வளாகத்திற்குள்ளே இறை உருவங்களைத் தவிர மனிதப் படிமங்கள் திகழக் கூடாது என்று ஆகமவிதிகள் அறிவிப்பதாய் ஒன்றிய அரசின் தொல்லியல் துறை கருதலாம். அதற்கொரு மறுப்பை அறிவிக்கிறேன். தேவாரப் பதிகங்களை மீட்டெடுத்த தமிழ் மாமன்னன் தேவார மூவராகிய அப்பர் - சம்பந்தர் - சுந்தரரின் செப்புத் திருமேனிகளை ஆலத்தியத்தினுள்ளே எழுப்பி வழிபடச் செய்தான்.

vairamuthu rajaraja cholan satayavizha

அந்த மனிதப் படிமங்களை எழுப்ப எந்த ஆகமவிதி இடம் தந்ததோ, அதே ஆகமவிதி ராசராசப் பெருமன்னனின் திருச்சிலையை ஆலய வளாகத்துக்குள் அமைக்க இடந்தராதா என்ற கேள்வியை முன்வைக்கிறேன். ஆழ்ந்து நோக்குமா ஆவன செய்யுமா ஒன்றிய அரசின் தொல்லியல் துறை?" என்று பேசினேன்.

தக்கவர்க்கு ராசராசன் விருது வழங்கினோம், தவத்திரு பொன்னம்பல அடிகளார், மாவட்டர் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், பாபாஜி ராஜா போன்ஸ்லே, தலைவர் செல்வம், தஞ்சை செழியன், பாம்பே ஸ்வீட்ஸ் மணி முதலியோர் உடனுள்ளனர். என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+