தஞ்சை பெரிய கோயிலுக்கு வெளியே இருக்கும் ராஜராஜ சோழன் சிலை.. உள்ளே வைப்பதை எது தடுக்கிறது! வைரமுத்து
சென்னை: ராஜராஜ சோழனின் சதய விழா மங்கல இசையுடன் கோலாகலமாக இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து, ராஜராஜ சோழன் சிலையை தஞ்சை பெரிய கோயில் வளகத்திற்குள் வைப்பதை எது தடுக்கிறது என பேசியிருந்தார். தற்போது அதனை கவிதை வடிவில் தனது எக்ஸ் தளத்தில் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். அதேபோல, ராஜராஜ சோழன் மன்னராக முடிசூட்டியதும் ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில்தான். பிறந்த நாளையும், முடிசூடிய நாளையும் ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டும் ராஜராஜ சோழனின் 1039 ஆம் ஆண்டு சதய விழா மங்கல இசையுடன் கோலாகலமாக இரண்டு நாட்கள் நடைபெற்றது. இரண்டு நாட்கள் வெகு விமர்சையாக இந்த விழா நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் தமிழ் அறிஞர்களுக்கு ராஜராஜன் விருது, தேவார நாயகம் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, ராஜராஜ சோழன் சிலையை தஞ்சை பெரிய கோயில் வளகத்திற்குள் வைப்பதை எது தடுக்கிறது என பேசியிருந்தார். இந்த நிலையில், விழாவில் பேசியதை கவிதை வடிவில் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். வைரமுத்து கூறியதாவது:-

மாமன்னன் ராசராசனின் 1039ஆம் சதயப் பெருவிழா தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் நிகழ்ந்தது. பங்குபெற்றேன். தமிழர்களின் கலைச்சின்னம் இது என்ற வரலாற்றுப் பரவசமும் வாள் வினையால் அகண்ட தமிழகம் கண்ட பேரரசனின் பேரன் என்ற பெருமிதமும் என்னைப் பேசவைத்தன. ஆலயம் எழுப்பிய அரசர்க்கரசனின் சிலை ஆலயத்துக்கு அகத்தே இல்லாமல் புறத்தே நிறுவப்பட்டிருப்பது கண்டு தமிழ் இதயங்களில் குருதி கசிகிறது, அறச் சீற்றத்தோடு பேசினேன்:
"ஆலய வளாகத்திற்குள்ளே இறை உருவங்களைத் தவிர மனிதப் படிமங்கள் திகழக் கூடாது என்று ஆகமவிதிகள் அறிவிப்பதாய் ஒன்றிய அரசின் தொல்லியல் துறை கருதலாம். அதற்கொரு மறுப்பை அறிவிக்கிறேன். தேவாரப் பதிகங்களை மீட்டெடுத்த தமிழ் மாமன்னன் தேவார மூவராகிய அப்பர் - சம்பந்தர் - சுந்தரரின் செப்புத் திருமேனிகளை ஆலத்தியத்தினுள்ளே எழுப்பி வழிபடச் செய்தான்.

அந்த மனிதப் படிமங்களை எழுப்ப எந்த ஆகமவிதி இடம் தந்ததோ, அதே ஆகமவிதி ராசராசப் பெருமன்னனின் திருச்சிலையை ஆலய வளாகத்துக்குள் அமைக்க இடந்தராதா என்ற கேள்வியை முன்வைக்கிறேன். ஆழ்ந்து நோக்குமா ஆவன செய்யுமா ஒன்றிய அரசின் தொல்லியல் துறை?" என்று பேசினேன்.
தக்கவர்க்கு ராசராசன் விருது வழங்கினோம், தவத்திரு பொன்னம்பல அடிகளார், மாவட்டர் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், பாபாஜி ராஜா போன்ஸ்லே, தலைவர் செல்வம், தஞ்சை செழியன், பாம்பே ஸ்வீட்ஸ் மணி முதலியோர் உடனுள்ளனர். என்று பதிவிட்டுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications