தஞ்சை பெரிய கோயிலுக்கு வெளியே இருக்கும் ராஜராஜ சோழன் சிலை.. உள்ளே வைப்பதை எது தடுக்கிறது! வைரமுத்து
சென்னை: ராஜராஜ சோழனின் சதய விழா மங்கல இசையுடன் கோலாகலமாக இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து, ராஜராஜ சோழன் சிலையை தஞ்சை பெரிய கோயில் வளகத்திற்குள் வைப்பதை எது தடுக்கிறது என பேசியிருந்தார். தற்போது அதனை கவிதை வடிவில் தனது எக்ஸ் தளத்தில் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். அதேபோல, ராஜராஜ சோழன் மன்னராக முடிசூட்டியதும் ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில்தான். பிறந்த நாளையும், முடிசூடிய நாளையும் ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டும் ராஜராஜ சோழனின் 1039 ஆம் ஆண்டு சதய விழா மங்கல இசையுடன் கோலாகலமாக இரண்டு நாட்கள் நடைபெற்றது. இரண்டு நாட்கள் வெகு விமர்சையாக இந்த விழா நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் தமிழ் அறிஞர்களுக்கு ராஜராஜன் விருது, தேவார நாயகம் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, ராஜராஜ சோழன் சிலையை தஞ்சை பெரிய கோயில் வளகத்திற்குள் வைப்பதை எது தடுக்கிறது என பேசியிருந்தார். இந்த நிலையில், விழாவில் பேசியதை கவிதை வடிவில் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். வைரமுத்து கூறியதாவது:-

மாமன்னன் ராசராசனின் 1039ஆம் சதயப் பெருவிழா தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் நிகழ்ந்தது. பங்குபெற்றேன். தமிழர்களின் கலைச்சின்னம் இது என்ற வரலாற்றுப் பரவசமும் வாள் வினையால் அகண்ட தமிழகம் கண்ட பேரரசனின் பேரன் என்ற பெருமிதமும் என்னைப் பேசவைத்தன. ஆலயம் எழுப்பிய அரசர்க்கரசனின் சிலை ஆலயத்துக்கு அகத்தே இல்லாமல் புறத்தே நிறுவப்பட்டிருப்பது கண்டு தமிழ் இதயங்களில் குருதி கசிகிறது, அறச் சீற்றத்தோடு பேசினேன்:
"ஆலய வளாகத்திற்குள்ளே இறை உருவங்களைத் தவிர மனிதப் படிமங்கள் திகழக் கூடாது என்று ஆகமவிதிகள் அறிவிப்பதாய் ஒன்றிய அரசின் தொல்லியல் துறை கருதலாம். அதற்கொரு மறுப்பை அறிவிக்கிறேன். தேவாரப் பதிகங்களை மீட்டெடுத்த தமிழ் மாமன்னன் தேவார மூவராகிய அப்பர் - சம்பந்தர் - சுந்தரரின் செப்புத் திருமேனிகளை ஆலத்தியத்தினுள்ளே எழுப்பி வழிபடச் செய்தான்.

அந்த மனிதப் படிமங்களை எழுப்ப எந்த ஆகமவிதி இடம் தந்ததோ, அதே ஆகமவிதி ராசராசப் பெருமன்னனின் திருச்சிலையை ஆலய வளாகத்துக்குள் அமைக்க இடந்தராதா என்ற கேள்வியை முன்வைக்கிறேன். ஆழ்ந்து நோக்குமா ஆவன செய்யுமா ஒன்றிய அரசின் தொல்லியல் துறை?" என்று பேசினேன்.
தக்கவர்க்கு ராசராசன் விருது வழங்கினோம், தவத்திரு பொன்னம்பல அடிகளார், மாவட்டர் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், பாபாஜி ராஜா போன்ஸ்லே, தலைவர் செல்வம், தஞ்சை செழியன், பாம்பே ஸ்வீட்ஸ் மணி முதலியோர் உடனுள்ளனர். என்று பதிவிட்டுள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications