படித்த அன்புமணியே இப்படி தொண்டர்களை தூண்டிவிட்டால் எப்படி.. இது நியாயமா.. ராஜேஸ்வரி பிரியா பாய்ச்சல்
அன்புமணி ராமதாஸ் மீது ராஜேஸ்வரி பிரியா குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: "நம்மதான் பூத்தில் இருக்கப்போறோம்... புரியுதா, புரியுதான்னு அன்புமணி கேட்டாரே.. இதுக்கு நடவடிக்கை இல்லையா? இதுதான் ஜனநாயகமா? முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த ஒருவர் தொண்டர்களை தூண்டிவிடுவது எந்த விதத்தில் நியாயம்? படித்தவர்கள் இதுபோல செய்யலாமா?" என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டு அன்புமணி ராமதாஸை கிழித்து தொங்கவிட்டுள்ளார் ராஜேஸ்வரி பிரியா!
அதிமுகவுடன் பாமக கூட்டணி என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து, அடுத்தடுத்த முக்கிய நிர்வாகிகள் பாமகவில் இருந்து விலகினர். அதில் முதலாவதாக கட்சியை விட்டு வெளியே வந்தவர்தான் ராஜேஸ்வரி பிரியா.
மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு இவர் சென்றுவிடுவார் என்று சொல்லப்பட்ட நிலையில், யாருடனும் சேராமல் தனித்து அரசியல் கட்சி ஒன்றினை ஆரம்பித்து, தென்சென்னை தொகுதியில் தொப்பி சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார்.

குற்றச்சாட்டுகள்
இந்நிலையில், சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் மனு ஒன்றினை அளித்த அவர், செய்தியாளர்களிடமும் பேசினார். அப்போது அன்புமணி ராமதாஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

கண்துடைப்பு
அப்போது அவர் சொன்னதாவது: "ஒரு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட்டதாக தெரிந்தால்கூட அந்த தொகுதியின் தேர்தலையே ரத்து செய்துவிட வேண்டும். அது எப்படி ஒரு வாக்குச்சாவடிக்கு மட்டும் ரத்து செய்கிறார்கள்? இது எதுக்கு? நாங்களும் நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லி கொள்கிறார்கள். எல்லாமே கண்துடைப்பு.

தூண்டிவிடலாமா?
தருமபுரியில் எல்லா வாக்குச்சாவடியிலும் முறைகேடு நடந்துள்ளது. ஆனால், கண்துடைப்புக்காக வெறும் 8 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு என்கிறார்கள். என்னை கேட்டால், தர்மபுரி தொகுதியில் மீண்டும் தேர்தல் வைக்க வேண்டும். ஏனென்றால் அன்புமணி அவரது தொண்டர்களையே தூண்டிவிட்டிருக்கிறார். பூத்தில் நம்மதான் இருக்கப்போறோம். பூத்தில் நம்மதான் இருக்கப்போறோம். புரியுதா, புரியுதான்னு நாசுக்காக கேட்டிருக்கிறார்.

இது நியாயமா?
இது சம்பந்தமாக தேர்தலில் விதிமீறல் நடந்ததை வீடியோ எடுத்து கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை.. புகார் கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை.. மக்களை தூண்டிவிட்டாலும் நடவடிக்கை இல்லை.. இதுக்கு எதுக்கு ஓட்டு போடணும், எதுக்கு தேர்தல் நடத்தணும்.. இது தான் ஜனநாயகமா? முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த இவர், தொண்டர்களை தூண்டிவிடுவது எந்த விதத்தில் நியாயம்? படித்தவர்கள் இதுபோல செய்யலாமா? என்று கேள்வி எழுப்பினார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications