வாழ்க்கையில் ஒழுக்கம் ரொம்ப முக்கியம்! ரசிகர்களுக்கு பொங்கல் தரிசனம் தந்த ரஜினிகாந்த் அட்வைஸ்!
சென்னை: வாழ்க்கையில் ஒழுக்கமும், சிந்தனையில் நேர்மையும் இருந்தாலே போதும் நிம்மதியாக இருக்கலாம் என நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் மெசேஜ் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லம் முன்பாக அவரது ரசிகர்கள் காலையிலேயே குவிந்துவிட்டனர். உடல் மண்ணுக்கு உயிர் தலைவனுக்கு என முழக்கங்கள் எழுப்பி வந்தனர். ரசிகர்கள் தன்னை பார்க்க திரண்டு வந்ததை அடுத்து தனது வீட்டின் குட்டிச்சுவரில் நின்று பொங்கல் தரிசனம் தந்தார் ரஜினிகாந்த்.

இரண்டு கைகளையும் அசைத்து தனது அன்பை வெளிப்படுத்திய அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, கேட்டை திறந்து வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார். பொங்கல் வாழ்த்துக் கூறிய ரஜினிகாந்த், வாழ்க்கையில் ஒழுக்கமும், சிந்தனையில் நேர்மையும் இருந்தாலே போதும் நிம்மதியாக இருக்கலாம் என்ற அறிவுரையையும் இன்று வழங்கினார். ஒழுக்கமும், நேர்மையும் இருந்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென இந்த பொன்நாளில் தாம் இறைவனை வேண்டுவதாகவும் அவர் தெரிவித்தார். மேற்கொண்டு எந்த விவகாரம் பற்றியும் ரஜினி பேசவில்லை.

அதைத் தொடர்ந்து துக்ளக் விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கூறிய அண்ணாமலை குறித்த ரஜினிகாந்த் கருத்து பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். ஆனால் சொல்ல வந்த அட்வைஸை மட்டும் சொல்லிவிட்டு மீண்டும் மின்னல் வேகத்தில் வீட்டுக்குள் சென்றுவிட்டார் ரஜினிகாந்த். இதனிடையே ரஜினிகாந்தை பார்த்த பிறகு பொங்கல் கொண்டாடிய மனதிருப்தி கிடைத்ததாக அங்கிருந்த ரசிகர்கள் கூறினர்.
தீபாவளி, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் ஆகிய பண்டிகை நாட்களில் மட்டும் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுப்பார் ரஜினிகாந்த். அந்த வகையில் இந்தாண்டும் பொங்கல் பண்டிகையொட்டி காட்சி தந்தார். பொங்கல் புத்தாடையாக காக்கி நிற வேட்டியும், வெள்ளை ஜிப்பாவும் அவர் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications