மக்களின் நலனுக்காக நானும் கமலும் நிச்சயம் இணைவோம்.. ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
Recommended Video
சென்னை: மக்கள் நலனுக்காக கமல்ஹாசனுடன் இணையும் சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வருவதாக கடந்த 2017-ஆம் ஆண்டு ரசிகர்கள் மத்தியில் அவர் பேசுகையில் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவோம் என்றார். பல்வேறு தருணங்களில் கமல் தன்னுடன் இணைந்து பணியாற்ற அழைத்த போது அவர் பிடிகொடுக்கவில்லை.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனே ரஜினியை நேரில் சென்று சந்தித்து ஆதரவு தருமாறு அழைத்து அவர் மௌனமாக இருந்தார்.

கமல் 60 விழா
இந்த சூழலில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 'கமல் 60' விழாவில் பேசிய ரஜினி, "அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். முதல்வராக பதவி ஏற்பார் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். ஆனால் சற்றும் எதிர்பார்க்காமல் அவர் முதல்வரானார். இது தான் வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் என்ன மாதிரியான அதிசயங்கள் வேண்டுமானாலும் நடக்கும் என்றார்.

எடப்பாடி முதல்வர்
மேலும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நான்கு, ஐந்து மாதம் கூட தாங்காது என்று சொன்னார்கள். நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்து விடுமென 99% பேர் சொன்னார்கள்.ஆனால் அதிசயம் நடந்தது. ஆட்சி நீடித்தது. அது மாதிரியான அதிசயம், அற்புதம் நேற்றும் நடந்தது. இன்றும் நடக்கிறது, நாளையும் நடக்கும். தமிழக அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்றும் ரஜினி தெரிவித்தார்.

ரஜினியுன் கூட்டு
இந்நிலையில் இன்று கமல் ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தை மேம்படுத்துவதற்காக நானும் ரஜினியும் இணைந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம். நானும் ரஜினியும் இணைய அவசியம் ஏற்பட்டால் இணைவோம் என்றார்.

ரஜினி கருத்துக்கு
மேலும் ரஜினி சொன்ன அதிசயம் உண்மைதான். படிக்காதவர்களுக்கு வழங்கும் முதல் கவுரவ டாக்டர் பட்டம் எனக்கு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி. நல்ல தலைவராக இருக்கக் கூடிய கோத்தபய நியாயமான ஆட்சியை தர வேண்டியது அவரது கடமை என்றார் கமல்.

கமலுடன் இணைவேன்
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து ரஜினி பேசுகையில், மக்கள் நலனுக்ககாக நானும் கமலும் இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என்றார்.

விரும்பவில்லை
எடப்பாடி முதல்வரானது அதிசயம் என்ற ரஜினியின் கருத்துக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் கண்டனம் தெரித்தது குறித்து கேள்விக்கு , ஒபிஎஸ் எனக்கு கண்டனம் தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து; அதுகுறித்து பதில் கூற விரும்பவில்லை என்று ரஜினி தெரிவித்தார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications