விஜய் கட்சியில் செங்கோட்டையன் இணைந்துள்ளாரே.. சட்டென வந்த கேள்வி.. ரஜினி கொடுத்த ரியாக்சன்!
சென்னை: தவெக தலைவர் விஜய் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்திருப்பது தொடர்பான கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் கொடுத்துள்ள ரியாக்சன் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அதேபோல் ஜெயிலர் 2 படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் இருப்பதாக கூறிய ரஜினிகாந்த், 50 ஆண்டுகள் கடந்தும் சினிமா பயணம் தொடர்வதற்கு ரசிகர்களின் ஆசீர்வாதமே காரணம் என்றும் கூறியுள்ளார்.
1996ஆம் ஆண்டு முதல் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறி வந்த நடிகர் ரஜினிகாந்த், 2020ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்க உள்ளதாக அறிவித்தார். கட்சி தொடங்குவதற்கான அத்தனை பணிகளையும் மேற்கொண்டு வந்த ரஜினிகாந்த், 2020ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று பின் வாங்கினார்.

இதனால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனிடையே விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. ஆனால் விஜய் திடீரென அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். இதன்பின் ரஜினிகாந்த் அரசியல் நிகழ்வுகள் தொடர்ந்து கவனித்து வருகிறார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் நெருக்கம் காட்டி வருகிறார்.
மறுபுறம் அண்ணாமலையுடன் தனியாக சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார். அவ்வப்போது ஓபிஎஸ், சீமான் உள்ளிட்டோரும் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சென்று சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவா திரைப்பட திருவிழாவுக்கு செல்வதற்காக ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மீதம் உள்ளது. தற்போது கோவாவில் வாழ்நாள் சாதனையாளர்களை மத்திய அரசு கெளரவிக்க உள்ளது. அதற்கான விழாவில் பங்கேற்க செல்கிறேன். சினிமாவில் 50 ஆண்டுகளாக தொடர்ந்து பயணிப்பதற்கு ரசிகர்களின் ஆதரவுதான் காரணம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்துள்ளார்.. அதுதொடர்பாக உங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த், கருத்து சொல்ல விரும்பவில்லை என்று வேகமாக அங்கிருந்து நகர்ந்து சென்றார். ரஜினிகாந்தின் ரியாக்சன் சோசியல் மீடியாவில் அவரது ரசிகர்களிடையே டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications