இலங்கை கடற்படை அட்டூழியம்! ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்! 18ஆம் தேதி பாம்பனில் மறியல்!
சென்னை: இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு முடிவு கட்டக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். மேலும், 18ஆம் தேதி பாம்பனில் சாலை மறியல் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் வரும் புதன்கிழமை அன்று ராமநாதபுரம் -ராமேஸ்வரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு பகுதியில் வைத்து நேற்றிரவு கைது செய்தனர். தமிழக மீனவர்களிடம் இருந்து 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடல் எல்லை பிரச்சனையை காரணம் கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவது தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படையின் ஈவு இரக்கமற்ற காட்டுமிராண்டித்தன நடவடிக்கையால் மிழக மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இலங்கையை பொறுத்தவரை கடும் பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் சூழலில் இந்தியா சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக தமிழக அரசு சார்பில் டன் கணக்கில் இலங்கை மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டன.
ஆனாலும் இலங்கை கடற்படையின் போக்கில் மாற்றம் தெரிந்தபாடில்லை. இதனிடயே தமிழக மீனவர்கள் கைதை கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இன்று நடைபெற்ற மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் பற்றி முடிவெடுக்கப்பட்டது. மேலும், மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மீனவர்கள் கைது விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்றிரவோ நாளையோ இது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போது கூட, இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவது பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications