சர்க்கரை அட்டைதாரர்களே.. ரேஷன் கடைகள் இனிமேல் இந்த நாட்களில் விடுமுறை? விரைவில் தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த ஆலோசனை ஒன்று தமிழக அரசு தரப்பில் நடந்து வருவதாக தெரிகிறது.. என்ன காரணம்?
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பயன்பெற்றும் வருகின்றனர். இதைத்தவிர பண்டிகை காலங்களில், துவரம் பருப்பு, பாமாயில் இலவசமாகவும் வழங்கப்படுகின்றன..

அந்தவகையில், ரேஷன் கடை ஊழியர்களின் பணிகள் அபரிமிதமானது.. பண்டிகை காலங்களை கணக்கில் கொண்டு, பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்ட பணிகளுக்காக கூடுதல் பணிகளையும் இவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
என்ன காரணம்: இதனால் ரேஷன் கடைகளை விடுமுறையின்றி திறந்துவைத்திருக்க வேண்டியிருக்கிறது. வேலைநாட்களுக்கு பதிலாக, வேறு நாட்களில் அந்த விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு ஈடுகட்டப்படுகின்றன.
ரேஷன் கடைகளின் நேரம் கிராமப்புறங்களில் ஒரு மாதிரியும், நகர்புறங்களில் வேறு மாதிரியும் இருக்கும். நகர்ப்புறங்களில் காலை 8.30 மணியிலிருந்து மதியம் 12.30 மணி வரைக்கும் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும்.. பிறகு மதியம் 3 மணியிலிருந்து 7 மணி வரைக்கும் பொருட்கள் வழங்கப்படும்.. கிராமப்புறங்களில் காலையில் 9லிருந்து 1 மணி வரையும், பிறகு 2 மணி முதல் 6 மணி வரையிலும் பொருட்கள் விநியோகிக்கப்படும்.
விடுமுறையா: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் தங்களும் விடுமுறை வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் நீண்ட காலமாகவே கோரிக்கையை வைத்து வருகிறார்கள்.. இந்த கோரிக்கையை அரசு தற்போது பரிசீலித்து வருவதாக தெரிகிறது.
ஞாயிறுதோறும் விடுமுறை திட்டத்தை செயல்படுத்தும் சாத்தியக்கூறு குறித்து, ஊழியர்கள் மற்றும் கார்டுதாரர்களுடன் ஆலோசிக்க அரசு முடிவு செய்திருக்கிறதாம்..
வெள்ளிக்கிழமை: கடந்த 2014ல் தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.. அதில், அலுவலகம் செல்வோர் ரேஷன் பொருட்கள் வாங்க வசதியாக, மாதத்தின் முதலாவது, 2வது ஞாயிற்றுக்கிழமைகள் வேலை நாட்களாகவும், அந்த வாரங்களில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டது... அதே நடைமுறைதான் இப்போதும் அமலில் உள்ளது.
ஆனால், விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை, ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்படுகின்றனவாம். இதனால், விடுமுறை கிடைப்பதில்லையாம்... அதுமட்டுமல்லாமல், ஞாயிற்றுக்கிழமைகளில் மிகக்குறைந்த ரேஷன்தாரர்களே பொருட்களை வாங்க வருகிறார்களாம். இதையெல்லாம் கருத்தில்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று ரேஷன் ஊழியர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ரேஷன்கார்டு: இதுகுறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை என்பதால், இதுதொடர்பாக, ரேஷன் கார்டுதாரர்கள் கடை ஊழியர்கள் உடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க, உணவு மற்றும் கூட்டுறவு துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஆனாலும், ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டுமே லீவு கிடைக்கும்போது, எப்படி ரேஷன் பொருட்களை வாங்குவார்கள்? என்றும் அலுவலகம் செல்பவர்கள் கேட்கிறார்கள்???
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications