ரேசனில் கருவிழி சரிபார்ப்பு.. இனி ரேஷன் பொருட்களை "இப்படித்தான்" வாங்கணுமாம்.. தமிழக அரசு அதிரடி
சென்னை: ரேஷன் அட்டைதாரர்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், தமிழக அரசு இன்னொரு அதிரடியை கையில் எடுக்க போகிறதாம்.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பயன்பெற்றும் வருகின்றனர்.

அதுமட்டுமல்ல, விரைவில் தீபாவளி பண்டிகை வரப்போகிறது.. எனவே, தீபாவளியை முன்னிட்டு, அடுத்த 2 மாதங்களுக்கு ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்குவது குறித்து, அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது. அதன்படி, அக்டோபர், நவம்பர் மாதங்களில், ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் சொல்கிறார்கள்.
பொதுமக்களின் நன்மைக்காக இப்படி பல்வேறு அதிரடிகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில், இன்னொரு முன்னெடுப்பையும் தமிழக அரசு செய்துள்ளது. அதன்படி, இன்னும் 2 மாதங்களில் கருவிழி சரிபார்ப்பு திட்டம் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வரப்போகிறதாம்.. இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சர் சக்கரபாணி ஒரு பேட்டி தந்திருந்தார்.
கருவிழி: அப்போது அவர் சொன்னது, "பயோ மெட்ரிக் உடன், கண் கருவிழி பதிவு மூலம் பொருட்களை பெற சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, பெரம்பலூர் பகுதியில் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு செய்து, அதன் மூலமாக ரேஷன் பொருட்கள் பெற அரசாணை வெளியிடப்பட்டு, டெண்டர் விடப்பட்டு உள்ளது. விரைவில் இந்த திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்" என்று கூறியிருந்தார்.
அதேபோல, கடந்த வாரம் திருச்சியில் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, இதுகுறித்து கூடுதல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "ரேஷனில் விரல் ரேகை பதிவு செய்து, பொருட்களை வாங்கும் நடைமுறை உள்ளது.
நம்பிக்கை: முதற்கட்டமாக, கருவிழியை பதிவு செய்து, ரேஷன் பொருட்கள் பெறும் நடைமுறை, 36,000 ரேஷன் கடைகளிலும் செயல்படுத்தப்பட்டு உள்ளது.. இன்னும் 2 மாதங்களில், தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும், இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும்" என்று உறுதிபட கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கருவிழி மூலம் பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, ஒயாசிஸ் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொது விநியோக திட்ட இணையதளம், ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிடுதல், பாயின்ட் ஆப் சேல் கருவிகள் பராமரிப்பு போன்ற பணிகளை ஒயாசிஸ் என்ற தனியார் நிறுவனம்தான் இதுநாள் வரை மேற்கொண்டு வந்தது. ஆனால், கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021 செப்டம்வரை ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஒப்பந்தம் முடிவடைய உள்ளது.
புதிய நிறுவனம்: எனவே, புதிய நிறுவனத்தை தேர்வு செய்வதற்காக, டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில், 4 நிறுவனங்கள் கலந்து கொண்ட நிலையில், இறுதியில், மறுபடியும் ஒயாசிஸ் நிறுவனத்திற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது..
இதையடுத்து, ரேஷன் கார்டுதாரர்களின் கருவிழியை சரிபார்த்து பொருட்கள் வழங்கும் கருவிகள், ரசீது வழங்கும் பிரிண்டர் சாதனம், புதிய விற்பனை முனைய கருவிகள் பொருத்த வேண்டும் என்றும், அதற்கான மென்பொருளை தயாரித்து 5 வருடங்கள் பராமரிக்க வேண்டும் என்றும் இந்த நிறுவனத்துக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
விரைவில் ஆரம்பம்: ஆக, டெண்டரும் முடிவாகி உள்ள நிலையில், அமைச்சர் உறுதி தந்ததுபோல, ரேஷனில் கருவிழி சரிபார்ப்பு திட்டம் விரைவில் ஆரம்பமாகும் என்றும் தெரிகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications