POS கருவியுடன் மின்னணு தராசு இணைப்பு.. திணறும் ரேஷன் கடை ஊழியர்கள்.. பொதுமக்கள் பரிதவிப்பு
சென்னை: ஒரு நாள் முழுமையாக காத்திருந்து தான் ரேஷன் கடையில் உணவு பொருட்களை வாங்க வேண்டிய அளவிற்கு நிலைமை சிக்கலாகிவிட்டது. அந்த காலத்தில் ரேஷன் கடைக்கு போ என்றால், ஆளைவிட்டால்போதும் என்று ஓடுவார்கள். ஏனெனில் எப்போதுமே கூட்டமாகவே இருக்கும். வாங்கவே முடியாது. ஆனால் அதேபோன்ற சூழ்நிலை இப்போதும் வந்துவிட்டது. POS கருவியுடன் மின்னணு தராசு இணைந்துள்ளது. இணையதள வேகக்குறைவால் திணறி வரும் ரேஷன் கடை ஊழியர்கள் திணறி வருகிறார்கள்.. மக்களும் தவிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்கள் பலருக்கு ரேஷன் கடைகளில் வழங்கும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை முக்கியமான உணவு பொருளாகும். அதுதான் கோடிக்கணக்கான மக்களின் ஜீவாதாரமாக இருக்கிறது. ஆனால் ரேஷன் கடையில் பொருட்களை வாங்க வேண்டும் என்றால், அதற்கு ஒரு நாள் விடுமுறை எடுத்தோ அல்லது ஒரு நாள் முழுக்க ஞாயிறுகளில் காத்திருந்தோ தான் வாங்கும் நிலை இருக்கிறது. முன்பைவிட இப்போது ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி செல்ல நீண்ட நேரம் ஆவதாக பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கிறார்கள். என்ன பிரச்சனை என்பதை பார்ப்போம்.

தமிழகம் முழுவதும் மொத்தம் 37 ஆயிரத்து 328 ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளில் பி.ஓ.எஸ். (பாயிண்ட் ஆப் சேல்) என்னும் மின்னணு கருவி மூலம் பொருட்கள் வினியோகத்திற்கான ரசீது வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள், ஸ்மார்ட் கார்டுன் சென்று கைரேகை வைத்தால் மட்டுமே ரசீது போடும் வகையில் இந்த கருவியின் மென்பொருள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது
இந்த கைரேகை பதிவு 90 சதவீதம் ஒத்துப்போனால்தான் ரசீது போட முடியும் என்ற நிலையில் கைரேகை பதிவு செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் ஆலோசித்து கைரேகை பதிவு 90 சதவீதம் ஒத்துப்போதல் என்பதை 70 சதவீதம் ஒத்துப்போனாலே ரசீது போடலாம் என்ற அளவிற்கு மாற்றார்கள்.. தற்போது கைரேகை பதிவு ஓரளவு எளிதாகி விட்டது,.
ஆனால் அதே நேரத்தில், தற்போது எடை போடும் கருவியும் 'புளூடூத்' அல்லது கேபிள் மூலம் 'பி.ஓ.எஸ்.' கருவியுடன் இணைக்கப்பட்டு ஒவ்வொரு பொருளின் எடையும் துல்லியமாக இருந்தால் மட்டுமே ரசீது போட முடியும் என்ற நிலையை உருவாக்கி உள்ளது. இந்த திட்டத்தால், பல மணி நேரம்வரை பொதுமக்கள் ரேஷன் கடையிலேயே காத்திருக்கும் நிலை இருக்கிறது. ஏனெனில் எடை எந்திரம் மற்றும் 'பி.ஓ.எஸ்.' கருவியை இணைப்பதற்கான இணையதள வேகம் குறைவாக இருப்பதால் காலதாமதம் ஏற்படுகிறதாம்.
பெரும்பாலான கடைகளில் ரேஷன் கடை ஊழியர்கள் தங்கள் செல்போனில் உள்ள 'டேட்டா'வை பயன்படுத்தி 'பி.ஓ.எஸ்.' கருவியை இயக்கி வருகிறார்கள். எனவே, தங்கள் 'பி.ஓ.எஸ். கருவிக்கான இணையதள வேகத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது தனி பிராட் பேண்டு இணைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
அதேநேரம் பி.ஓ.எஸ். கருவியானது 'சிம்' மூலம் இயங்குகிறது. சிம் மூலம் வழங்கப்படும் இணையதள சேவைக்கு தகுந்த கட்டமைப்பு பி.ஓ.எஸ். கருவி இருக்கவேண்டும். இணையதள சேவையை 5ஜி அளவிற்கு உயர்த்தி, அதற்கு தகுந்தாற் போன்ற உட்கட்டமைப்புகளை பி.ஓ.எஸ். கருவியிலும் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications