பயங்கர சொதப்பல்.. பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமம் ரத்து! ரிசர்வ் வங்கி அதிரடி
சென்னை: பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்திருக்கிறது. சில்லறை விற்பனை கடைகளில் ஆன்லைன் பேமெண்ட்ஸ் மூலம் வர்த்தகம் செய்ய உதவியாக பேடிஎம் பேமெண்ட்ஸ் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது இதன் உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று நள்ளிரவை தாண்டிய பின்னர், அதாவது வணிக நேரம் முடிந்த பிறகு, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி.. இனி வங்கியாகச் செயல்பட முடியாது என ஆர்பிஐ அறிவித்திருக்கிறது. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் படி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உரிமம் ரத்து செய்யப்பட்டதற்கான 3 காரணங்களை ஆர்பிஐ லிஸ்ட் போட்டிருக்கிறது. முதல் காரணம், விதிமீறல்கள்தான். வங்கி நிர்வாகம் தொடர்ந்து விதிமுறைகளை மதிக்காமல் செயல்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.
இரண்டாவது காரணம், வாடிக்கையாளர் நலன் விஷயத்தில் கோட்டை விட்டது. வங்கியின் செயல்பாடுகள் வாடிக்கையாளர்களின் மற்றும் பொதுமக்களின் நலனுக்கு எதிராக இருந்ததாக RBI கருதுகிறது.
மூன்றாவது காரணம், நிர்வாகக் குறைபாடுகள். அதவாது வங்கியின் மேலாண்மைத் தரம் மற்றும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதில் தோல்வி ஏற்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications