மக்களை தேடி மருத்துவம்.. பயனாளிகள் பட்டியலை வெளியிட தயார்.. எடப்பாடிக்கு மா.சுப்பிரமணியன் பதில்!
சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் பயனாளிகளின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்ட நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்காக இதுவரை ரூ.85 கோடி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், பயனாளிகளின் விவரங்களை கொடுக்க தயார் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் முதல் நபருக்கு மருத்துவ பெட்டகம் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம், தொற்றா நோய்களான சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடு தேடிச் சென்று, அவர்களுக்கு மாதம்தோறும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதன் பயனாளிகள் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் படிப்படியாக வளர்ந்து ஒரு கோடியாவது பயனாளி என்ற இலக்கை எட்டியது.

எடப்பாடி பழனிசாமி கேள்வி
ஒரு கோடியே ஒன்றாவது பயனாளியான திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மீனாட்சிக்கு இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வழங்கினார். இந்த நிலையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு இதுவரை எவ்வளவு ரூபாய் செலவு செலவு செய்யப்பட்டுள்ளது என்றும், திட்டத்தின் ஒரு கோடி பயனாளிகளின் முழு விவரங்களையும் அரசு வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

மா.சுப்பிரமணியன் விளக்கம்
இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு செய்தியாளர்களை சந்தித்து மா.சுப்பிரமணியன் கூறுகையில், கடந்த 4 மாதங்களுக்கு முன் இதே அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அப்போது அதற்கான பதில் அளித்திருக்கிறேன்.

மத்திய அரசு பாராட்டிய திட்டம்
சுகாதாரத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்வதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மத்திய அமைச்சர் தமிழ்நாடு வந்த போது, சுமார் 5 ஆயிரம் பயனாளிகளுக்கு நேரடியாக மருந்து பெட்டகத்தை வழங்கியுள்ளார்.

பயனாளிகள் விவரம்
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளியாக சிட்லபாக்கத்தில் உள்ள பாஞ்சாலை என்பவருக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. அதேபோல் 60 லட்சமாவது பயனாளியாக மதுரை அருகே பெரியசாமி என்பவருக்கு மருந்து பெட்டகம் வழங்கினோம். 75 லட்சமாவது பயனாளியாக நாமக்கல் அருகே நல்லம்மாள் என்பவருக்கும், 80 லட்சமாவது பயனாளியாக கோதாமேடு அருகே சாந்தி என்பவருக்கும், 90 லட்சமாவது பயனாளியாக விருகம்பாக்கத்தில் ஷெரீனா பேகம் என்பவருக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது.

விவரம் வெளியிட தயார்
அரசியல்வாதிகள் செல்லாத இடங்களுக்குக் கூட மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் சென்றடைந்திருக்கிறது. இந்த திட்டத்தின் செயல்பாடுகளை அறிந்துகொள்ளாமல், அரைவேக்காட்டுத்தனமான அறிக்கைகளை வெளியிடுவதென்பது சுகாதார பணியாளர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். அவர் விரும்பினால் டிபிஎஸ் அலுவலகத்தில் ஒரு கோடி பயனாளிகளின் தகவல்களையும் கொடுக்க தயாராக இருக்கிறோம். இந்த திட்டத்துக்காக தமிழக அரசால், ரூ.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்? -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications