எலக்சன் ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்...அதிமுகவில் வெடிக்க போகிறதா இன்னொரு 'தர்ம யுத்தம்'?
Recommended Video
சென்னை: அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் அமைச்சர்கள். எம்.எல்.ஏக்கள் நாளைய தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கிறார்களாம். அதிமுக படுதோல்வி கிடைத்தால் அக்கட்சியில் பிரளயம் வெடிக்குமாம்.
அதிமுகவில் கொங்கு மண்டலத்தின் கை ஓங்கி இருப்பதாக கூறப்படுவது வழக்கம். ஆனால் அதே கொங்கு மண்டலத்தில் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது கோஷ்டி பூசல்.
அமைச்சர் கருப்பண்ணனுக்கும் தோப்பு வெங்கடாசலத்துக்கும் இடையேயான மோதலால் தோப்பு கட்சி பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அத்துடன் செய்தியாளர்களை சந்தித்து புலம்பலை தொடங்கிவிட்டார்.

மேலும் முதல்வர் எடப்பாடியின் முடிவுகளால் அதிருப்தியில் இருப்பவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டும் வருகிறார்கள். லோக்சபா தேர்தல் முடிவுகள் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் எனவும் ஒருதரப்பு அமைதி காக்கிறதாம்.
அதிமுகவுக்கு படுதோல்வியை தேர்தல் தந்தால் நிச்சயம் அக்கட்சியில் பெரும் பிரளயமே வெடிக்கும், இதற்குத்தானே காத்திருந்தோம் என புற்றீசலாய் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்க்கள் போர்க்கொடி தூக்குவார்கள் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications