Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சிக்கல்.. தனி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யணுமா? அப்படின்னா யுடிஎஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்திரப்பதிவு துறையானது, அடுத்தடுத்த கட்டண உயர்வுகளை அமல்படுத்தியிருந்த நிலையில், அதுகுறித்த நடைமுறையில் சில சிக்கல்களும் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், நிலத்தின் பிரிக்கப்படாத பங்கான யுடிஎஸ் பத்திரம் தனியாகவும், கட்டுமான ஒப்பந்தம் தனியாகவும், இதுநாள்வரையிலும் பதிவு செய்யப்பட்டு வந்தது.

Registration fee be reduced for Flats buyers and do you know whats UDS Certificate

ஆனால், பணி நிறைவு சான்றிதழ் பெறப்பட்ட நிலையில், யுடிஎஸ் பத்திரம், கட்டுமான ஒப்பந்தம் தனித்தனியாக பதிவு செய்யப்படுவதால், பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டது.

பணிநிறைவு சான்றிதழ்: அதனால்தான், பணி நிறைவு சான்றிதழ் பெற்ற திட்டங்களில், யுடிஎஸ் பத்திரத்திலேயே கட்டிட மதிப்பையும் குறிப்பிட்டு, இரண்டுக்கும் சேர்த்து முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் வசூலிக்க, பதிவுத்துறை முடிவு செய்திருக்கிறது. அந்தவகையில், பணி நிறைவு சான்றிதழ் பெற்ற குடியிருப்புகளில், வீடு விற்பனையின்போது, யுடிஎஸ் பத்திரத்தில் வீட்டின் பரப்பளவையும், மதிப்பையும் குறிப்பிடுவது சமீபத்தில் கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த முடிவானது, இது நடுத்தர மக்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி வருகிறது. காரணம், ஒரு புதிய நடைமுறையை அமல்படுத்தும்போது, காலஅவகாசம் தரவேண்டும். ஆனால், உடனே அடுத்த நடைமுறை வந்துள்ளது..

முன்பதிவு: இந்த கட்டண உயர்வினால், பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பும் ஏற்படுவதுடன், கட்டுமான நிறுவனங்களும் பாதிக்கப்படும், பதிவுக்கான கூடுதல் செலவால், வீடு வாங்க முன்பதிவு செய்தவர்கள், பல இடங்களில் முன்பதிவை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக இந்த முடிவை திரும்ப பெற வேண்டும்" என்றும் அரசுக்கு கோரிக்கைகளும் தொடர்ந்துள்ளன.

இந்நிலையில், பதிவுத்துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவில், "அடுக்குமாடி திட்டங்களில் பணி நிறைவு சான்றிதழ் பெற்ற வீடுகளுக்கு மட்டுமே, இந்த புதிய நடைமுறை பொருந்தும். பணிகள் நடந்து வரும் திட்டங்களில், யுடிஎஸ் பத்திரம் தனியாகவும், கட்டுமான ஒப்பந்தம் தனியாகவும் பதிவு செய்வதில், எந்தவிதமானதடையும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரமாண பத்திரம்: ஆனால், இதில், திடீர் புகார் ஒன்று கிளம்பி உள்ளதாம். பணிகள் முடியாத திட்டங்களில், யுடிஎஸ் பத்திரங்களை தனியாக பதிவு செய்ய, சார் - பதிவாளர்கள் மறுப்பதாகவும், கட்டிட மதிப்பையும் சேர்த்து, அதற்கும் முத்திரை தீர்வை செலுத்த கட்டாயப்படுத்துவதாகவும், கட்டுமான பணிகள் முடியவில்லை என்பதற்கு, தனியாக பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும்படி சொல்கிறார்களாம். எனினும், இந்த சிக்கலும் விரைவில் தீர்க்கப்படும் என்று நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+