சுழண்டு சுழண்டு வரும் "சக்கரம்".. வங்க கடலில் ரெமெல் புயலால் வீசுது அலை! எகிறியடிக்குது "பாறை மீன்"
சென்னை: வங்கக்கடலில் புயல் உருவாகியிருக்கும் சூழலில், ஒட்டுமொத்த மீன் பிரியர்களும் கவலையில் உள்ளார்கள்.. என்ன காரணம் தெரியுமா?
மீன்பிடி தடைக்காலம் தற்போது அமலில் இருந்து வருவதால், மீன்களின் வரத்து குறைவாக உள்ளது. மீனவர்களும் குறைந்த ஆழத்திலேயே மீன்களை பிடித்து விற்பனை செய்வதால், விற்பனைக்கு வரும் மீன்களின் விலையும் ஒரேயடியாக அதிகரித்துவிடுகிறது.

சென்னை காசிமேடு, கோவை உக்கடம், உள்ளிட்ட பல்வேறு மீன் மார்க்கெட்டுகளில் மீன விலை உயர்ந்தபடியே உள்ளது.. வழக்கமாக ரூ.700க்கு விற்பனையாகும் வஞ்சிரம் மீன் ரூ.1200க்கு விற்கப்படுகிறது. மற்ற மீன்களும் கிலோவுக்கு ரூ.100 வரை விலை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்தபிறகுதான் விலை குறைந்து பழைய நிலைக்கு விற்பனை செய்யப்படும் என்கிறார்கள் மீன் வியாபாரிகள். தற்போது கோடை மழை பெய்து வருவதால், மீன்கள் வரத்து பாதியாக குறைந்து விட்டதும், மீன்விலை உயர்வுக்கு காரணம் என்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான், வங்கக் கடலில் ரெமல் புயல் உருவாகியிருக்கிறது..
வார்னிங்: கடலில் பலத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டும் என்றும், ஆழ்கடலில் மீன்பிடிப்பவர்களுக்கும் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருநதது.. இதனால், மீனவர்களும் கரைக்கு திரும்பி உள்ளார்கள்.. புயல் காரணமாக வங்கக்கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது.
இந்த கொந்தளிப்பு அடுத்தடுத்த நாட்களிலும் காணப்படும் என்பதாலும், கடலில் சூறைக்காற்று வீசும் என்பதாலும், மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் வானிலை ஆய்வு மையமும், மீன்வளத்துறை அதிகாரிகளும் கேட்டுக் கொண்டனர். எனவே தமிழ்நாட்டில் மார்க்கெட்டுகளில் மீன்களின் விலை எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது.
அதிர்ச்சி: எப்போதுமே சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் மட்டும்தான் மீன்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார்கள்.. அந்தவகையில், தூத்துக்குடியில் உள்ள திரேஸ்புரம் துறைமுகத்தில் உள்ள மீன் அங்காடியில் மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.. ஆனால் மீன்களின் விலையை கேட்டு அதிர்ந்து போய்விட்டார்கள் மீன் பிரியர்கள்..
வெறும் 400 முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ ஷீலா மீன், இப்போது 1,500 முதல் 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கூடை சாளை மீன் நேற்று 5 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.. ஆனால், இன்று 6 ஆயிரம் ரூபாயை தாண்டிவிட்டதாம்.. பாறை மீன் 700 ரூபாய் வரையிலும், குருவளை 350 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலை குறையும்: மீன்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் மீன் வாங்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வங்கக் கடலில் புயல் கரையை கடந்த பிறகு, நாட்டுப் படகுகள் மீன்பிடிக்க சென்றால் மட்டுமே இந்த விலை உயர்வு குறையும் என்கிறார்கள் மீன் வியாபாரிகள். இதனால் மீன் பிரியர்கள் நொந்துபோயுள்ளனர்...!!
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications