செப். 7 முதல் ரயில் சேவை இயக்கம்- நாளை முதல் கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பயணிகள் ரயில் செப்டம்பர் 7-ந் தேதி இயக்கப்படுவதால் கவுன்ட்டர்களில் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா லாக்டவுன அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அனைத்து ரயில், விமான சேவைகளும் நிறுத்தப்பட்டது.

சுமார் 5 மாதங்களுக்குப் பின்னர் லாக்டவுன் கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதனால் பேருந்து, ரயில்சேவைகள் மீண்டும் இயக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் செப்டம்பர் 7-ந் தேதி முதல் பயணிகள் ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாளை முதல் கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications