தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என். ரவியே தொடர்ந்து இருக்க வேண்டும்.. அப்போது தான்.. மு.க ஸ்டாலின் பேச்சு
சென்னை: சனாதனம், வர்ணாசிரமம் குறித்து நம்முடைய ஆளுநர் தினமும் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் பேசுவது நமக்கு பிரசாரமாக அமைந்து கொண்டு இருக்கிறது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்.
சென்னை தியாகரய நகரில் நன்னன் குடி அமைப்பு சார்பில் பேராசிரியர் மா. நன்னன் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:- நீதிக்கட்சியில் நுழைந்து திராவிடக் கட்சியில் செயல்பட்டு திராவிட முன்னேற்ற கழகத்தில் மிகத் தீவிரமாக செயல்பட்டவர் நன்னன் என்பதன் அடையாளமாகவே இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

புலவர் நன்னன் அகமும், புறமும் அப்பழுக்கற்றவாக,நேர்மையானவராக விளங்கியவர். நன்னன் மறைந்தாலும் அவரது பெயரால் புத்தகங்கள் வெளி வந்து கொண்டிருக்கிறது. நன்னனின் புத்தகங்கள் நாட்டுடமையாக்கப்படும். நன்னன் 124 புத்தகங்களை நமக்காக உருவாக்கி தந்து சென்றிருக்கிறார். கருணாநிதியின் வாரிசு என்றால் நான் மட்டுமல்ல, திராவிட கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருக்கிற அனைவரும் கருணாநிதியின் வழித்தோன்றல்கள்தான்.
இந்த வழித்தோன்றல்கள் தோன்றி கொண்டே இருப்பார்கள். அடக்குமுறைக்கு வழித்தோன்றல்கள் இருப்பது போல, விடுதலை இயக்கத்துக்கும் எப்போதும் வழித்தோன்றல்கள் இருப்பார்கள். இந்தியாவை கபளீகரம் செய்ய சனாதன, வர்ணாசிரம சக்திகள் துடித்துக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் தந்தை பெரியாரின் எழுத்துக்களை 21 மொழிகளில் கொண்டு வருவதற்கு நாம் முன்னெடுப்புகளை செய்து கொண்டு வருகிறோம்.
தமிழ்நாட்டுக்கு ஒரு பெரியார் என்பதை போல மற்ற மாநிலங்களுக்கு இல்லை. எங்களுக்கு பெரியார் இல்லையே, திராவிட இயக்கம் இல்லையே... என்ற ஏக்கம் இன்றைக்கு மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு வந்துள்ளது. சனாதனம், வர்ணாசிரமம் குறித்து தினமும் நம்முடைய ஆளுநர் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பேசுவது நமக்கு ஒரு பிரசாரமாக அமைந்து வருகிறது அது வேற..
நான் தொடர்ந்து பல கூட்டங்களில் சொல்லி இருக்கிறேன், அவரே ஆளுநராக இருக்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய கொள்கையை நாம் வளர்க்க முடியும். நம்முடைய பிரசாரத்தை சிறப்பாக செய்ய முடியும். தினந்தோறும் தவறான பாடங்களை ஆளுநர் நடத்திக் கொண்டிருக்கிறார். ஆளுநர் பேசி வருவது நம்முடைய கொள்கைக்கு மிகப்பெரிய விளம்பரத்தை கொடுத்து வருகிறது. அண்ணா சொன்னார், வாழ்க வசவாளர்கள். அதைதான் நான் இப்போது சொல்ல வேண்டி உள்ளது.

எனது எதிரிகள் தான் என்னை உற்சாகமாக வைத்திருக்கிறார்கள் என்று பெரியார் சொன்னார். அத்தகைய எதிரிகளுக்கு பதில் சொல்வதற்கு நன்னனின் எழுத்துக்கள் நமக்கு அதிகமாக பயன்படும். எப்படி எழுத வேண்டும்... எப்படி பேச வேண்டும் என்பது மட்டும் அல்ல.. எப்படி வாழ வேண்டும் என்பதையும் நமக்கு நன்னன் கற்றுக் கொடுத்தார். வாழ்நாள் எல்லாம் கொள்கைகாக வாழ்ந்தார்...
கொள்கையின் அடையாளமாகவே வாழ்ந்தார். தன்னுடைய குடும்பத்தையும் கொள்கைகளையும் இணைத்துக் கொண்டு வாழ்ந்தார். மரணம் நெருங்கும் போது சொன்னார்... எனக்கு வருத்தம் எதுவும் கிடையாது.. நிறைவாழ்க்கை வாழ்ந்துவிட்டேன் என்று சொன்னார். தனக்கு பின்னால் தனது செயலை குடும்பம் தொடர்ந்து செய்ய வழிகாட்டினார்" இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications