Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமர்நாத்தை உத்தர பிரதேசத்திற்கு மாற்றுவதால் கீழடி ஆய்வில் எந்த பாதிப்பும் ஏற்படாது! சொல்கிறார் கரு நாகராஜன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கீழடியை ஆய்வு செய்து நகர நாகரிகம் இருந்ததற்கான ஆதாரத்தைக் கண்டுபிடித்தவர் அமர்நாத் ராமகிருஷ்ணன். இவரை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை நொய்டாவுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த இடமாற்றத்தை எம்பி சு வெங்கடேசன் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர். இதற்கிடையே இது தொடர்பாக பாஜகவின் துணைத் தலைவர் கரு நாகராஜன் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

தேசிய தொல்லியல் & நினைவுச் சின்னங்கள் அமைப்பின் இயக்குநராக அமர்நாத் ராமகிருஷ்ணன் இருக்கிறார். கடந்த 2014 முதல் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு நடந்தபோது, தொல்லியல் கண்காணிப்பாளராக அமர்நாத் தான் பணியாற்றி இருந்தார். இவரது டீம் நடத்திய ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களில் தான் நகர நாகரிகம் இருந்ததற்கான ஆதாரம் கண்டறியப்பட்டது.

Routine transfer says BJP Karu Nagarajan in Amarnath Ramakrishna transfer

அமர்நாத் ராமகிருஷ்ணன்

இதற்கிடையே அவர் தமிழகத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். அதற்குத் தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், அவர் மீண்டும் தமிழகத்தில் பணியமர்த்தப்படவில்லை. இதற்கிடையே கீழடியில் நடந்த முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கைகளை 2023 ஜனவரி மாதமே இந்தியத் தொல்லியல் துறையிடம் அமர்நாத் சமர்ப்பித்தார்.

இருப்பினும், அதை இதுவரை மத்திய அரசு வெளியிடவில்லை. இதற்கிடையே சமீபத்தில் அறிக்கையில் சில திருத்தங்களை மேற்கொள்ளச் சொல்லி அமர்நாத்திற்கு தொல்லியல் துறை கடிதம் எழுதியிருந்தது. அதில் கி.மு. 5ம் நூற்றாண்டிலிருந்து 8ம் நூற்றாண்டு வரையிலான ஆய்வுகளுக்கு ஆதாரங்கள் தேவை என்றும் கூறப்பட்டு இருந்தது. இருப்பினும், கூடுதல் ஆதாரம் அல்லது திருத்தங்கள் தேவையில்லை என அமர்நாத் பதில் கடிதம் எழுதினார்.

அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிடமாற்றம்

இதற்கிடையே அமர்நாத் ராமகிருஷ்ணனை மீண்டும் இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டெல்லியில் பணியாற்றி வந்த அவர் நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு எம்பி சு வெங்கடேசன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு எதிராக, தென்னிந்தியாவின் வரலாற்றுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் பாரபட்சமான நடவடிக்கை இது என அவர் சாடியிருந்தார்.

கரு நாகராஜன்

இருப்பினும், இது வழக்கமான இடமாற்றம் தான் என பாஜக துணைத் தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதிய தலைமுறை செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "மத்திய அரசு அந்த துறை மற்றும் அதற்கான பணிகளுக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கும். அவர் ஏற்கனவே டெல்லியில் சிறப்பாக பணியாற்றியவர் தான். அங்கிருந்து கீழடி போல நாடு முழுக்க தொல்லியல் துறையின் இடங்களுக்குச் சென்று சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். இப்போதும் அவரது பணி மேலும் சிறப்பாக அமையக் கூட பணியிட மாறுதல் நடந்திருக்கலாம் தானே.!

வழக்கமான இடமாற்றம் தான்

உத்தரப் பிரதேசம் போவதால் அவர் கீழடி குறித்துப் பேசக்கூடாது.. தகவல்களைச் சேகரித்துக் கொடுக்கக்கூடாது எந்தவொரு அறிக்கையும் கொடுக்கக்கூடாது என இருக்காது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் இதற்கு முன்பு டெல்லியில் இருந்த போதும் அவர் கீழடி குறித்து ஆய்வு செய்திருக்கிறார். கருத்துகளைச் சேகரித்துச் சொல்லி இருக்கிறார்.

இதையும் உடனே முதல்வர் விமர்சிக்கலாம்.. பார்த்தீர்களா நமது வரலாற்றை மறைக்க முயல்கிறார்கள் என்ற ஒரு கற்பனை வசனத்தை அவர் ரெடி செய்து வைத்திருக்கலாம். அப்படி எல்லாம் இதுவும் இல்லை. இது எதார்த்தமாக நடந்த பணியிட மாற்றமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+