கோயம்பேட்டில் ஆக்கிரமிப்பு.. கோவிலுக்கு சொந்தமான 13 கோடி கட்டிடம் மீட்பு.. நேரில் சென்ற சேகர்பாபு
சென்னை: சென்னை அரும்பாக்கம் உத்தனாச்சியம்மன், மங்களேசுவரர் மற்றும் பால விநாயகர் கோவிலுக்கு சொந்தமான கோயம்பேடு ஜவஹர்லால் நேரு சாலையில் அமைந்துள்ள ரூ.13 கோடி மதிப்பிலான 8 ஆயிரத்து 742 சதுர அடி வணிக மனை மற்றும் கட்டிடம் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளால் அண்மையில் மீட்கப்படடிருந்தது. இந்நிலையில் கோயம்பேடு சென்ற அமைச்சர் சேகர்பாபு அந்த இடத்தை அண்மையில் ஆய்வு செய்தார்.
இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடக்கும் சீராய்வுக் கூட்டங்களின்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் சட்டசபை அறிவிப்புகளின் பணி முன்னேற்றத்தை ஆய்வு செய்யும்போது கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கும் பணிகளுக்கு தனி முக்கியத்துவம் அளித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துகிறார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை 1,038 கோவில்களுக்கு சொந்தமான ரூ.8,015.80 கோடி மதிப்பீட்டிலான 7,930.34 ஏக்கர் நிலங்கள் ஆக்கிமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதோடு, நவீன தொழில்நுட்ப கருவிகளின் உதவியோடு கோவில்களுக்கு சொந்தமான 2 லட்சத்து 15 ஆயிரத்து 385 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 820 எல்லை கற்கள் நட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே அமைச்சர் சேகர்பாபு, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட சென்னை, அரும்பாக்கம் உத்தனாச்சியம்மன், மங்களேசுவரர் மற்றும் பால விநாயகர் கோவிலுக்கு சொந்தமான கோயம்பேடு ஜவஹர்லால் நேரு சாலையில் அமைந்துள்ள ரூ.13 கோடி மதிப்பிலான 8 ஆயிரத்து 742 சதுர அடி வணிக மனை மற்றும் கட்டிடத்தை கடந்த அக்டோபர் 1-ந்தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பி.என்.ஸ்ரீதர், மண்டல இணை கமிஷனர் எஸ்.மோகனசுந்தரம், உதவி கமிஷனர் கி.பாரதிராஜா மற்றும் செயல் அலுவலர்கள் உடனிருந்தனர்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ரூ. 7,132 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு கடந்த ஜனவரி மாதம் கூறியிருந்தார். அதன்பிறகு பல்வேறு இடங்களில் கோயில் நிலங்கள் மீட்கப்படடது. திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவில் தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான, 1.40 ஏக்கர் நிலம் கடந்த மாதம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு 100 கோடியாகும்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications