சென்னையில் ஓடும் காரில் தீ விபத்து.. கிண்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்.. பரபரப்பு!
சென்னை ஆலந்தூர் மெட்ரோ நிலையம் அருகில் சாலையில் சென்ற கார் தீ பிடித்ததால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: சென்னை ஆலந்தூர் மெட்ரோ நிலையம் அருகில் சாலையில் சென்ற கார் தீ பிடித்ததால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கத்திப்பாரா பாலம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. ஈக்காட்டுதங்களில் இருந்து வந்த வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக தீ பிடித்து இருக்கிறது.

தீ பிடித்தபடியே கார் சில மீட்டர்கள் நகர்ந்து சென்றுள்ளது. அதன்பின் சாலை நடுவில் தடுப்பு சுவரில் மோதி கார் நின்றது. இந்த கார் தற்போது கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருக்கிறது.
அங்கு கார் தீ பிடித்த காரணத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிண்டி முதல் விமான நிலையம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் 15 நிமிடம் அங்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை.
இதையடுத்து அங்கு உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வந்து காரில் ஏற்பட்ட தீயை அணைத்தார்கள். எதனால் இந்த தீ ஏற்பட்டது என்று தெரியவில்லை. கார் பேட்டரியில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications