பெண் பத்திரிகையாளர்கள் மீதான அவதூறு கருத்து.. சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் இன்று ஆஜர்
சென்னை: பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாக விமர்சித்திருந்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கையும் நெல்லை உள்ளிட்ட நீதிமன்றங்களில் எஸ்.வி.சேகர் மீது நிலுவையில் உள்ள அவதூறு வழக்குகளையும் 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இந்த வழக்கு சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.வி.சேகர் ஆஜரானார். அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து நீதிபதி கேள்வி எழுப்பிய போது தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
மேலும் தான் அந்த சமயத்தில் கண்களில் மருந்து விட்டிருந்ததாகவும் வாட்ஸ் ஆப்பில் வந்த ஒரு தகவலை படிக்காமல் பார்வேர்டு செய்ததாகவும் தவறான கருத்து அதில் இருப்பதை அறிந்து உடனே டெலிட் செய்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். தான் தவறான கருத்து பதிவிட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதில் எஸ்.வி.சேகர் ஆஜராகியுள்ளார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications