Sabarimala Gold Theft case: நடிகர் ஜெயராமிடம் விசாரணை! சென்னை வீட்டில் எஸ்ஐடி சரமாரி கேள்வி!
சென்னை: சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டில் வைத்து அவரிடம் சிறப்பு புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அவரது பெயர் சாட்சியாக சேர்க்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரக பாலகர் சிலைகளுக்கு தங்க மூலாம் பூசியபோது 4.5 கிலோ தங்கம் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அம்மாநில கூடுதல் டிஜிபி வெங்கடேஷ் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் தங்கமுலாம் பூசும் செலவை கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
உன்னியிடம் 10 மணி நேரம் விசாரணை
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உன்னிகிருஷ்ணனிடம் 10 மணி நேரம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்திய பின்னர் அவரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்தது. புகாரின்பேரில் உன்னி கிருஷ்ணன் போத்தி உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சபரிமலை தங்கத் திருட்டு விவகாரத்தில் நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். சென்னையில் உள்ள ஜெயராமின் வீட்டில் வைத்து இந்த விசாரணை நடத்தப்பட்டது.
துவார பாலகர்
அதாவது சபரிமலை துவார பாலகரின் சிலையிலிருந்த தங்கத் தகடுகள் சென்னைக்கு பழுது பார்க்க கொண்டு வரப்பட்ட போது நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து பூஜை செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
40 ஆண்டுகளாக பயணம்
அப்போது ஜெயராம் கூறுகையில், நான் 40 ஆண்டுகளாக சபரிமலைக்கு சென்று வருவதால் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரை எனக்கு தெரியும். சபரிமலை கருவறைக்குச் செய்யப்பட்ட தங்கத் தகடுகளை வீட்டில் வைத்துப் பூஜை செய்தால் செழிப்பு உண்டாகும் என உன்னி கிருஷ்ணன போத்தி சொன்னதால்தான் பூஜை செய்தோம் என ஜெயராம் தெரிவித்தார்.
முன்னதாக, ஜெயராம் இல்லத்தில் தங்கத் தகடுகள் வைத்து பூஜை செய்யப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவின. தங்கத் திருட்டுச் செய்திகள் வெளிவந்ததும், தகடுகள் தமது வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார். முக்கியக் குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போத்திக்குச் சட்டபூர்வ ஜாமீன் கிடைக்கும் நிலையில், SIT இன் இந்த நகர்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
90 நாட்கள்
போத்தி கைது செய்யப்பட்ட போதிலும், 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் அவருக்கு ஜாமீன் பெறும் வாய்ப்பு உருவானது. துவாரபாலகா சிலை மோசடி வழக்கில் அக்டோபர் 17 அன்று SIT ஆல் போத்தி கைது செய்யப்பட்டார். தங்கத் தகடுகள் திருட்டு அவருக்கு எதிரான இரண்டாவது வழக்கு. அவரது கைதை நவம்பர் 3 அன்று பதிவு செய்தனர்.
தங்கத் திருட்டு
தங்கத் திருட்டு வழக்கில் 90 நாட்களுக்குள் ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை அடுத்து சிறப்பு புலனாய்வு துறை விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நடிகர் ஜெயராம், இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்படுவார் என சொல்லப்படுகிறது.
-
தங்கம் விலை இன்னும் 30 சதவீதம் சரிய போகுது.. இன்ப அதிர்ச்சி தந்த நகை வியாபாரிகள் சங்க தலைவர் -
தங்கத்தை விட்டு தள்ளுங்க.. போர் ஆரம்பித்தவுடன் எகிறியது "இது" தான்! ஆனாலும் ஒரு ரிஸ்க் இருக்கு -
தலைகீழாகப் போகுதே தங்க மார்க்கெட்! இந்த நேரத்துக்கெல்லாம் 2 லட்சம் போயிருக்கனும்! தொடர் சரிவு ஏன்? -
ரூ.14 கோடி தங்கம்! விருதுநகரில் பறக்கும் படை அதிகாரிகள் ரெய்டில் சிக்கிய நகைகள்! யாருக்கு சொந்தமானது? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications