தங்கமான அறிவிப்பு.. மலிவு விலையில் தங்கம்.. தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை.. இன்றே கடைசி
சென்னை: தமிழகத்தில் உள்ள மாவட்ட தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை இன்றே கடைசி நாளாகும். இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
தங்கத்தை முதலீட்டு நோக்கில் மட்டும் வாங்க மட்டுமே விரும்புபவர்களை இலக்காக வைத்து, கடந்த 2015-ல் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது தான் இந்த தங்கப்பத்திரத் திட்டம் (Sovereign Gold Bond scheme - SGB).

தங்கப்பத்திரம்: இந்த திட்டத்தில் தங்கத்தை பொருள் வடிவில், அதாவது நகையாகவே, நாணயமாகவோ வாங்காமல் பத்திர வடிவில் வாங்கி முதலீட்டிற்கான பலனை பெற முடியும். அதுமட்டுமல்ல, தங்கத்தை பொருள் வடிவில் வைத்திருந்தால், அதனை திருடு போகாமல் பாதுக்காக்க வேண்டியிருக்கிறது.. அதனால், தங்கத்தை ஆவண வடிவில் இப்படி பாதுகாப்புது மிக எளிதாகவும் இருக்கிறது.
தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரம் திட்டத்தின்கீழ், யார் வேண்டுமானாலும் தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.. இதற்கான வெளியீட்டு விலையை ஒரு கிராமுக்கு ரூ.6271 என ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. ஆண்டுக்கு 2.50 சதவீதம் வட்டி 6 மாதத்துக்கு ஒருமுறை பெற்றுக் கொள்ளலாம்.
தபால் நிலையங்கள்: முதிர்வு தொகை 24 கேரட் தங்கத்துக்கு ஈடாக அப்போதைய தங்கத்தின் மதிப்புக்கு பெற்றுக் கொள்ள முடியும்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், தபால் நிலையங்கள், அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள், என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ ஆகியவற்றில் தங்கப் பத்திரங்களை வாங்க முடியும்.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடப்படும் மத்திய அரசின் தங்கப் பத்திரங்கள் விற்பனை அஞ்சல் நிலையங்களில் பிப்ரவரி 12-ம் தேதி முதல் பிப்ரவரி 16-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தங்கத்தில் முதலீடு: அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், "இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடப்படும் மத்திய அரசின் தங்கப் பத்திரங்கள் விற்பனை அஞ்சல் நிலையங்களில் பிப்ரவரி 12-ம் தேதி முதல் பிப்ரவரி 16-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. இது பத்திர வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருப்பதுடன், தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும்.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6263 ஆகும். ஒருவர் ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக 4 கிலோ வரை தங்கம் வாங்கலாம். பொது மக்கள், அறக்கட்டளைகள், பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகலாம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தங்கப்பத்திரம்: அந்தவகையில், இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடப்படும் மத்திய அரசின் தங்கப் பத்திரங்கள் விற்பனை அஞ்சல் நிலையங்களில் இன்றே கடைசி நாளாகும்.
என்ன செய்ய வேண்டும்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு, பான் கார்டு, ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல் கட்டாயமாக தேவைப்படும். பிறகு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகணக்கு புத்தகத்தின் முதல்பக்க ஜெராக்ஸ், இவைகளை கொண்டு, தங்கப் பத்திரத்தை அனைத்து தபால் நிலையங்களிலும் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இந்த நிதியாண்டின் கடைசி தங்கப் பத்திர விற்பனை இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications