Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாதி கொடுமைக்கு வர்ணாசிரமம் காரணமா? சனாதனம் ஒழுக்கத்தை தான் குறிக்கிறது - ஐகோர்ட் நீதிபதி கருத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை: சனாதனம் குறித்து பேசியது தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, ஆ ராசா எம்பி ஆகியோருக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், ‛‛நமது சமூகத்தில் உள்ள சாதிய அமைப்பு கடந்த நூற்றாண்டில் தான் உருவாக்கப்பட்டது. அதனால் சாதிய கொடுமைகளுக்கு வர்ணாசிரமத்த பழி கூற முடியுமா? சனாதனம் என்பது ஒழுக்க நெறியை தான் குறிக்கிறது'' என கருத்து தெரிவித்தார்.

தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியது.

Sanathanam refers to morals only says Chennai High Court Judge Anita Sumanth on Udhyanidhi Stalin case

உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‛‛ சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு முதலில். வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அதேபோல் தான் சனாதனம்.'' என்றார்.

உதயநிதியின் இந்த பேச்சுக்கு எதிராக தான் பாஜகவினர் கொந்தளித்தனர். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்பட பல பாஜக தலைவர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதோடு உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போலீஸ் நிலையங்களில் புகார்கள் செய்யப்பட்டன. இதையடுத்து அவர் மீது வெளிமாநில போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுமட்டுமின்ற உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் தான் உதயநிதி ஸ்டாலின், மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு மற்றும் தொடர்ந்து சானாதானத்தை ஒழிக்க வேண்டும் மேடைகளில் பேசி வரும் ஆ ராசா ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எந்த தகுதியின் அடிப்படையில், இவர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ -வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்து முன்னணி மாநில செயலாளர் மனோகர், அமைச்சர் உதயநிதிக்கு எதிராகவும், மற்றொரு செயலாளர் கிஷோர் குமார், அமைச்சர் சேகர்பாபுவிற்கு எதிராகவும், மாநில துணைத் தலைவர் விபி ஜெயக்குமார் ஆ.ராசாவிற்கு எதிராகவும் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 23 ம் தேதி இந்த வழக்குகளின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்குகளில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பளித்த நீதிபதி அனிதா சுமந்த், இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்தவை என்ற போதும், மனுதாரர் கோரிய எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக் கூறி, வழக்குகளை முடித்து வைத்தார். அதாவத வழக்குகளில் தண்டிக்கப்பட்டால் மட்டுமே இந்திய அரசியல் சட்டமும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டமும், மக்கள் பிரதிநிதிகள் தகுதியிழப்பு ஆகும் எனக் கூறிய நீதிபதி, சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்குகளில் தண்டனை ஏதும் விதிக்கப்படாத நிலையில், முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளின் அடிப்படையில், எந்த தகுதியில் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்கும்படி உத்தரவிட முடியாது. மனுதாரர்கள் கோரிய எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக் கூறி வழக்குகளை முடித்து வைத்துள்ளார்.

இந்த வேளையில் நீதிபதி அனிதா சுமந்த் முக்கிய கருத்துகளை தெரிவித்தார். அவர் கூறுகையில், ‛‛அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். அது முழுமையான புரிதலுடன் இருக்க வேண்டும். அந்த கருத்துகள் எந்த ஒரு நம்பிக்கைக்கும் அழிவை ஏற்படுத்துவதாக இருக்க கூடாது. ஆக்கப்பூர்வமான கருத்துக்களையே தெரிவிக்க வேண்டும்.

பொது இடங்களில் அமைச்சர்கள், எம்பிக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் உண்மை விவரங்களின் அடிப்படையில் துல்லியமாக இருக்க வேண்டும். எந்த கொள்கையை பின்பற்றுபவராக இருந்தாலும், அரசியல் சட்டத்தின் அடிப்படையிலேயே கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். என தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டதன் மூலம் மட்டுமே அதற்கு ஒப்புதல் அளித்ததாக கருத முடியாது.

சனாதன தர்மத்தை எய்ட்ஸ், கொரோனா, மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு பேசியதை பொருத்தவரை, இந்துத்துவத்தை பற்றிய புரிதல் இல்லாததையே காட்டுகிறது. சனாதனம் என்பது அழிவற்ற, நிலையான, ஒழுக்க நெறிகளை குறிக்கிறது. ஆனால், சனாதனம் பற்றி நீங்கள் பேசிய கருத்து முற்றிலும் தவறானது. நமது சமூகத்தில் உள்ள சாதிய அமைப்பு, கடந்த நூற்றாண்டில் தான் உருவாக்கப்பட்டது. அப்படியிக்க, சாதிய கொடுமைகளுக்க வர்ணாசிரமம் தான் காரணம் என பழி கூற முடியுமா? வர்ணாசிரமம் பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை. தொழிலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. சமூகம் சுமுகமாக செயல்பட உருவாக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+