சொன்னா சொன்னதுதான்.. மணல் குவாரியை உடனே திறக்க வேண்டும்.. லாரி ஓனர்கள் இன்று திருச்சியில் போராட்டம்
சென்னை: தமிழகத்தில் மூடப்பட்டிருக்கும் மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு தமிழகம் முழுவதும் இயங்கி வந்த 17-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுவிட்டன. அவை அனைத்துமே மூடப்பட்டுவிட்டன.

பிறகு முழுமையாக ஆன்லைன் மூலமாக மணல் வழங்கப்பட்டது... இப்போது மணல் வழங்குவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டதால், தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் மணல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் கட்டுமானத் தொழில், லாரி தொழிலில் ஈடுபட்டு வரும் கிட்டத்தட்ட 30 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரை ஹைகோர்ட்: இதனிடையே, இந்த விவகாரத்தில் மதுரை ஹைகோர்ட்டில், ஒப்பந்ததாரர்களை வைத்து மணல் விற்பனை செய்யக் கூடாது என்றும் பொதுப்பணித்துறையே ஆறுகளிலிருந்து நேரடியாக மணலை எடுத்து ஆன்லைனில் விற்பனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது...
இந்த நிலையில், மணல் குவாரிகள் இதுவரை திறக்கப்படாததை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.. தமிழ்நாடு ஒருங்கிணைந்த மணல் மற்றும் சவுடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் திருச்சியில் நடக்கிறது.
அறிவிப்பு: இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி அறிக்கை ஒன்றையும் 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.. அந்த அறிக்கையில், "தமிழகத்தில் 55 ஆயிரம் மணல் லாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மாட்டு வண்டிகளும் இயக்கி வந்தன. இந்நிலையில், ஆற்றில் அளவிற்கு அதிகமாக மணல் அள்ளுவதாகவும், முறைகேடு நடப்பதாகவும் எழுந்த புகாரின்பேரில், அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு அரசு மணல் குவாரிகளை மூடினர்.
இதனால், மணல் லாரி உரிமையாளர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். எனவே, பொதுப்பணித்துறை மூலம் மணல் குவாரிகளை திறந்து அரசே நேரிடையாக மணல் வழங்க வேண்டுமென மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில், தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
இன்று போராட்டம்: ஆகஸ்ட் 9ம் தேதி திருச்சி திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் அருகில், உண்ணாவிரத போராட்டம் நடத்த போகிறோம்.. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள், மாட்டு வண்டி உரிமையாளர்கள் பங்கேற்க உள்ளனர்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications