சென்னை மாநகராட்சி ஆணையர் வீட்டை முற்றுகையிட்டு.. உள்ளே செல்ல முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பணி நிரந்தரம் கோரி சென்னை தூய்மைப் பணியாளர்கள் போராடி வரும் நிலையில், இதுவரை அரசு தரப்புடன் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Chennai sanitary workers tn government

சென்னை ராயபுரம் மற்றும் திருவிக நகர் மண்டலங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் தங்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை ரிப்பன் மாளிகை அலுவலக வாசலில் தூய்மைப் பணியாளர்கள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் அவர்கள் அவ்வப்போது திடீரென போராட்டத்தில் குதித்து வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு நடத்தப்பட்டதை போன்று மீண்டும் ரிப்பன் மாளிகை வளாகப் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 28 ஆம் தேதி தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்தை நடத்தினர். கடந்த 30 ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் அருகே போராட்டத்தில் ஈடுபட தூய்மைப் பணியாளர்கள் பலர் திரண்டு வந்தனர். அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அண்ணா அறிவாலயம், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம், ரிப்பன் மாளிகை என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் போராட்டம் நடத்தி வரும் அவர்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வீட்டை முற்றுகையிட்டு இன்று (ஜனவரி 2) போராட்டம் நடத்தினர்.

வீட்டுக்குள் நுழையும் முயன்றவர்களை போல சார் பேரி கார்டுகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர்களை அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+