'இந்தியாவின் தோசை கிங்'.. ஜெயிலுக்கு போன சரவணபவன் அண்ணாச்சிக்கு கிடைச்ச புது பட்டம்
Recommended Video
சென்னை: ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சிக்கு புதியதாக இந்தியாவின் தோசை கிங் என பட்டம் சூட்டி இருக்கின்றன வட இந்திய ஊடகங்கள்.
ஜீவஜோதியை அடைய நினைத்தார் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால். ஆனால் ஜீவஜோதியோ பிரின்ஸ் சாந்தகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனால் அடியாட்களை ஏவி பிரின்ஸ் சாந்தகுமாரை கடத்தி கொடைக்கானல் மலையில் இருந்து உருட்டிவிட்டு படுகொலை செய்தார் ராஜகோபால். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில் ராஜகோபாலுக்கும் அவரது அடியாட்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில் அனைவரும் இன்று சரணடையவும் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் ராஜகோபால் சரணடைய அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்துக்குப் போனார்.
உச்சநீதிமன்றமோ ராஜகோபாலின் மனுவை தள்ளுபடி செய்து உடனே சரணடைய உத்தரவிட்டது. தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராஜகோபால் அண்ணாச்சி.
இச்செய்தியை எழுதியுள்ள வட இந்திய ஊடகங்கள் ராஜகோபாலுக்கு புது பட்டமாக 'இந்தியாவின் தோசை கிங்' தோசை கிங் என சூட்டியுள்ளன.
'ஆசை ராஜா'வுக்கு தோசை ராஜா பட்டமாம்!












Click it and Unblock the Notifications