நானும் ஜெயலலிதாவும் முக்காடு போட்டுகிட்டு.. திருவான்மியூர் சாலையில் நடந்தே செல்வோம்.. சசிகலா தகவல்
சென்னை: நானும் ஜெயலலிதாவும் திருவான்மியூர் சாலையில் முக்காடு போட்டுக் கொண்டு நடந்தே செல்வோம் என சசிகலா தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தந்தி டிவி அளித்த பேட்டியில் கூறுகையில் வீடியோ கவரேஜ் மூலமாகத்தான் ஜெயலலிதா எனக்கு பழக்கமானார்கள். எங்கள் நிறுவனத்தின் வீடியோக்கள் சிறப்பாக இருந்ததால் என்னை போனில் அழைத்து பாராட்டினார்.
என்னை அவர் வீட்டிற்கு அழைத்ததன் பேரில் நான் அங்கு சென்றேன். எனக்கு ஜெயலலிதாவையும் எம்ஜிஆரையும் மிகவும் பிடிக்கும். எனக்கு பிடித்த படம் ஆயிரத்தில் ஒருவன். நான் பார்த்த முதல் திரைப்படமும் ஆயிரத்தில் ஒருவன்தான்.

நெருக்கம்
தொடக்கத்திலிருந்தே அவருடன் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. அவர் வீட்டில் தனியாகவே இருந்தார். ஆனால் எனது நட்பால் அவரது தனிமை குறைந்தது. ஜெயலலிதாவுக்கு பொது இடங்களுக்குச் செல்ல வேண்டும் என ஆசை. ஆனால் அவர் சினிமா பிரபலம் என்பதால் வெளியே செல்ல முடியாத சூழல்.

மிகவும் ஆசை
இந்த ஆசையை என்னிடம் சொன்னார். இதையடுத்து நானும் ஜெயலலிதாவும் முக்காடு போட்டு கொண்டு யாருக்கும் தெரியாமல் திருவான்மியூர் சாலைகளில் நடந்து செல்வோம். ஜெயலலிதாவின் அறிமுகத்தினால் எம்ஜிஆரை நான் அவ்வப்போது சந்திப்பேன்.

எம்ஜிஆர் தோட்டம்
அவரது ராமாவரம் தோட்டத்திற்கு நான் செல்வேன். அப்போது எம்ஜிஆரை சந்திக்க கட்சி நிர்வாகிகளும் அமைச்சர்களும் காத்துக் கொண்டிருப்பார்கள். நான் வருவதை எம்ஜிஆரின் தனிச் செயலாளரிடம் போனில் தெரிவிப்பேன். நான் சென்றதும் என்னை நேராக வந்து அவரது தனிச் செயலாளர் அழைத்து செல்வார்.

பர்னசல் அசிஸ்டென்ட்
இதை பார்க்கும் அங்கு காத்திருப்போர், யார் இவங்க, நாமெல்லாம் காத்திருக்கிறோம், இவங்க நேராக செல்கிறார்களே என பேசிக் கொள்வார்கள். இதனால் மூத்த அமைச்சர்களின் கோபத்துக்கு நான் ஆளாகியுள்ளேன். எம்ஜிஆர் என்னை பார்க்கும் போதெல்லாம் அம்முவை நன்றாக பார்த்துக் கொள் என கூறுவார் என்றார் சசிகலா.












Click it and Unblock the Notifications