ஜெயலலிதா மரணம்: சசிகலா, விஜயபாஸ்கர் உட்பட 4 பேர் குற்றம் செய்தவர்கள்! குண்டை போட்ட ஆறுமுகசாமி ஆணையம்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் சசிகலா, சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை குற்றம் செய்தவராக கருதி விசாரிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக மெதுவாக நடந்து வந்த விசாரணை சமீபத்தில் முடிந்தது. இந்த விசாரணை ஆணையம் எடப்பாடி ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டாலும், அது திமுக ஆட்சி காலத்திலும் நீடித்தது. பல முறை இந்த ஆணையம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.
இந்த விசாரணையின் முடிவில் அறிக்கை தயார் செய்யப்பட்டு அது தமிழ்நாடு அரசிடம் வழங்கப்பட்டது. அதன்பின் இந்த அறிக்கை பற்றி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஆலோசனை செய்யப்பட்டது.

இதையடுத்து சட்டசபையில் இன்று அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதில் சசிகலாவை குற்றம் செய்தவராக கருதி விசாரிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. சசிகலாவை குற்றம் சாற்றுவதை தவிர வேறு வழியே இல்லை. ஜெயலலிதா மயக்கம் அடைந்த பின் நடந்தது எல்லாம் ரகசியமாக உள்ளது.சசிகலா உட்பட 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும்.

அறிக்கை
இதையடுத்து சட்டசபையில் இன்று அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதில் சசிகலாவை குற்றம் செய்தவராக கருதி விசாரிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. சசிகலாவை குற்றம் சாற்றுவதை தவிர வேறு வழியே இல்லை. ஜெயலலிதா மயக்கம் அடைந்த பின் நடந்தது எல்லாம் ரகசியமாக உள்ளது.சசிகலா உட்பட 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும்.

விசாரணை
சசிகலா. கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கர். அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையில், 2012-க்குப் பிறகு ஜெ- சசிகலா இடையே சுமூகமான உறவு இல்லை. ஜெயலலிதா மயக்கத்துக்குப் பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டுவிட்டன. ஜெ. டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என பொய்யான அறிக்கையை வெளியிட்டனர்.

விசாரணை
சசிகலா. கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கர். அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையில், 2012-க்குப் பிறகு ஜெ- சசிகலா இடையே சுமூகமான உறவு இல்லை. ஜெயலலிதா மயக்கத்துக்குப் பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டுவிட்டன. ஜெ. டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என பொய்யான அறிக்கையை வெளியிட்டனர்.

மரணம்
ஜெயலலிதாவுடன் சசிகலா மீண்டும் இணைந்த பிறகு இருவருக்கும் சுமூக உறவு இல்லை. பிரிவிற்கு பின் இவர்கள் சேர்ந்த போது அவர்களிடம் சுமுகமான உறவு இல்லை. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையே அளிக்கவில்லை. ஜெயலலிதா இறந்த நேரத்திலும் முரண்பாடு என ஆறுமுகசாமி ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மரணம்
ஜெயலலிதாவுடன் சசிகலா மீண்டும் இணைந்த பிறகு இருவருக்கும் சுமூக உறவு இல்லை. பிரிவிற்கு பின் இவர்கள் சேர்ந்த போது அவர்களிடம் சுமுகமான உறவு இல்லை. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையே அளிக்கவில்லை. ஜெயலலிதா இறந்த நேரத்திலும் முரண்பாடு என ஆறுமுகசாமி ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மிகப்பெரிய குழப்பம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறி உள்ளனர். முழுமையாக ஆராயாமல் வழங்கிய எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஏற்கவில்லை, என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறப்பட்டு உள்ளது.

மிகப்பெரிய குழப்பம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறி உள்ளனர். முழுமையாக ஆராயாமல் வழங்கிய எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஏற்கவில்லை, என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறப்பட்டு உள்ளது.

ஆஞ்சியோ
ஆஞ்சியோ மற்றும் அறுவை சிகிச்சை குறித்தும் இந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டு உள்ளது. அதில், மறைந்த முதல்வர் 22.09.2016 அன்று மயக்கமடைந்த பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்களால் கண்டறியப்பட்டது. இரத்தப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு, பதிவுகளை ஆராய்ந்த மருத்துவமனை மருத்துவர்கள், எல்.வி. ஃபெய்லியர் மற்றும் தொற்று ஆகியவற்றால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு வெஜிடேசன் சந்தேகிப்பதாகவும் தெரிவித்தனர்.

பரிந்துரை
டாக்டர். Y.V.C.ரெட்டி ஒரு இதயநோய் நிபுணர், அவரது சாட்சியங்களில், மறைந்த முதல்வருக்கு mild regurgitation ஏற்பட்டிருக்கலாம், ECHO செய்யப்பட்டதில் L.V. Diastolic Dysfiunction ஏற்பட்டு இருக்கலாம். அதாவது சிறிய அளவிலான இதய நோய் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலேயே அவருக்கு sepsis infection, நீரிழிவு நோய், இரத்தக்கொதிப்பில் ஏற்ற இறக்கம் இருந்தது. நான்கைந்து நாட்களுக்குப் பின்னர் இதயக் கோளாறு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அப்போலோ ஆவணங்கள் படி அவருக்கு இதயத்தில் பாதிப்பு இருந்ததும், அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது.

செய்யவில்லை
டாக்டர் சமின் ஷர்மாவை மறைந்த முதலமைச்சரை சந்திக்க அழைத்துச்சென்றபோது பரிசோதனைக்குப் பின்னர், மருத்துவ பதிவுகளைப் பார்த்து "அவரே கொரோனரி ஆஞ்சியோகிராம் செய்யவும், அச்சிகிச்சை செய்ய தயாராகவும் இருந்தார், ஆனால் மருத்துவமனை நடவடிக்கை எடுக்கவுமில்லை, அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கவுமில்லை" என கூறினார்.

என்ன நடந்தது?
மறைந்த முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடனேயே டாக்டர்.சோமன் அறிவுறுத்திய பிறகும், அவர்கள் ஆஞ்சியோ செய்யவில்லை. இதை பற்றி கேட்டபோது, அவர் ஒரு தீவிரசிகிச்சை மருத்துவர் மட்டுமே; அதனால் அவருக்கு அது குறித்து எக்கவலையும் இல்லை என்றும், இதனால் ஆஞ்சியோ ஒத்திவைக்கப்பட்டது என்றும், அதற்கு எந்த விளக்கமும் இல்லை என்றும் சாதாரணமாகக் கூறுகிறார். அவரின் உயிரை காக்க வேண்டிய முக்கியமான அறுவை சிகிச்சையை அவர்கள் செய்யாமல் தடுக்கப்பட்டு உள்ளனர் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications