கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. மவுனம் கலைக்கிறாரா சசிகலா? நாலாதிசையிலும் எடப்பாடிக்கு சிக்கலா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு பற்றி மீண்டும் ஆடியோ அல்லது வீடியோ வெளியிட சசிகலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் மீண்டும் பரபரப்பை கிளப்பி வருகிறது. இந்த வழக்கில் சயான் மற்றும் மர்மமான முறையில் உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை அறிக்கை நாளை உதகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. சயான் ஏற்கனவே மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தி இருந்தார். இதனால் நாளைய விசாரணை அறிக்கையில் இடம்பெறப் போகும் தகவல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு வழக்கு

பெங்களூரு வழக்கு

இதனிடையே கோடநாடு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க கோரி ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு ஏற்கனவே பெங்களூரு சிறையில் சொகுசாக இருக்க லஞ்சம் கொடுத்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு தலைக்கு மேலே தொங்கும் கத்தியாக உள்ளது.

சசிகலாவின் மவுனம்

சசிகலாவின் மவுனம்

இந்த நிலையில் கோடநாடு வழக்கிலும் சசிகலா இழுத்துவிடப்படுகிறார். கோடநாடு எஸ்டேட் பங்களா பற்றிய முழு விவரம் அறிந்தவர்கள் ஜெயலலிதாவும் சசிகலாவும்தான். ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் சசிகலாதான் இதுபற்றி பேசியிருக்க வேண்டும். ஆனால் சசிகலாவோ எதுவுமே பேசாமல் அமைதி காத்து வருகிறார். இது சசிகலா மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.

Recommended Video

    தவறு செய்தவர்களுக்கு தண்டனை.. கோடநாடு வழக்கில் யாரும் தப்ப முடியாது- Minister Thangam Thennarasu
    சசிகலாவை விசாரிக்க கோரிக்கை

    சசிகலாவை விசாரிக்க கோரிக்கை

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரது சொத்து ஆவணங்களை கோடநாடு பங்களாவில் பதுக்கி வைத்திருந்ததாகவும் அதை மீட்பதற்காகவே சிலரால் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு. ஆனாலும் சசிகலா எதுவுமே பேசாமல் இருக்கும் நிலையில் நீதிமன்றத்திலும் அவரையும் விசாரித்தாக வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

    மவுனம் கலைக்கிறாரா?

    மவுனம் கலைக்கிறாரா?

    ஏற்கனவே அதிமுகவை தன்வசப்படுத்த ஆடியோ அரசியலை கையில் எடுத்து தோற்றவர் சசிகலா. ஆனாலும் விடாது கருப்பாக கோடநாடு வழக்கு தொடர்பாக ஆடியோ அல்லது வீடியோ ஒன்றை சசிகலா விரைவில் வெளியிடுவார் என கூறப்படுகிறது. அப்படி வெளியாகும் ஆடியோ, வீடியோவில் பொத்தாம் பொதுவாக பேசப் போகிறாரா? அல்லது அதிமுகவை கைப்பற்ற விடாமல் சதி செய்தவர்களையும் கோர்த்துவிடப் போகிறாரா? என்பதுதான் எதிர்பார்ப்பு.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+