பள்ளி மாணவர்களை குறிவைத்து விதவிதமான போதை பொருட்கள்.. “கவனிக்கிறீங்களா இல்லையா?” - கொதித்த சசிகலா!
சென்னை : தமிழகத்தில் நிலவும் போதைப் பொருட்களின் ஆதிக்கத்தை ஒழிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை பொருட்களின் நடமாட்டத்தை கண்டறிந்து தடுக்கவும், தமிழக அரசு புதிய செயல் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
தமிழக போலீசாரின் பல்வேறு நடவடிக்கைகளையும் மீறி, ஆங்காங்கே கஞ்சா கடத்தப்படுவதும், ரகசியமாக விற்பனை செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது.
பள்ளி மாணவர்கள் மத்தியிலும் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாக வெளியாகும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், மாணவச் செல்வங்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் நேரடியாக தலையிட்டு உடனே சரிசெய்யவேண்டும் என சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கஞ்சா நடமாட்டம்
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையும், புழக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கஞ்சாவை வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரும் கும்பல், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு ரகசியமாக விற்பனை செய்து வருகின்றனர். இதனால், தமிழகத்தில் பல்வேறு குற்றச் செயல்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அரசின் மெத்தனப் போக்கு காரணமாகவே தமிழகத்தில் கஞ்சா கலாச்சாரம் அதிகரித்து விட்டதாக, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

கஞ்சா வேட்டை
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போலீஸாரால் கடந்த சில மாதங்களாக ஆபரேசன் கஞ்சா என்ற பெயரில் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது. கஞ்சா விற்றவர்களை பிடித்து தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கைதான நபர்களின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை முழுமையாக அழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போலீசாரின் பல்வேறு நடவடிக்கைகளையும் மீறி, ஆங்காங்கே கஞ்சா கடத்தப்படுவதும், ரகசியமாக விற்பனை செய்யப்படுவதும், கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

இனத்தையே அழிக்கும் போதை
இந்நிலையில், தமிழகத்தில் அதிகரிக்கும் போதை பழக்கத்தை கட்டுப்படுத்த கோரி சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் நம் இனத்தையே அழிக்கக்கூடிய வகையில் இளம் சமுதாயத்தினரை குறிவைத்து நடக்கின்ற போதை பொருட்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், பள்ளியில் படிக்கும் மாணவச்செல்வங்களே போதைக்கு அடிமையாகி சீரழிந்து கொண்டு இருப்பதாக வரும் தகவல்கள் மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழகத்தில் பரவலாக அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக சென்னை, கோவை போன்ற மாநகரங்களிலும், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே தங்கு தடையின்றி போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக செய்திகள் வருவது மிகவும் கவலை அளிக்கிறது.

ஆன்லைனில் கஞ்சா டெலிவரி
மேலும், சென்னையில் ஆன்லைனில் கஞ்சா ஆர்டர் செய்தால் வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்வதாக செய்திகள் வருகின்றன. அதேபோன்று, உணவு டெலிவரி செய்வதுபோல் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்வதாகவும், தற்போது சாக்லேட், பபுள் கம், மேற்புறத்தில் இனிப்பு தடவப்பட்ட மாத்திரைகள் போன்று பல்வேறு வடிவங்களில் குழந்தைகளை கவரும் வகையில் விதவிதமான போதை பொருட்கள் விற்கப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. வேலியே பயிரை மேய்ந்த கதையாக காவல்துறையை சேர்ந்தவர்களே இதில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியடைய வைக்கிறது.

அரசுக்கு தெரியுமா?
பள்ளியில் படிக்கும் சிறுவர், சிறுமியர்கள் கூட இந்த போதை பழக்கத்திற்கு ஆளாகி இருப்பதாகவும், வகுப்பறைக்கு உள்ளேயே தற்போது போதை பொருட்கள் வந்து விட்டதாகவும், இதன் காரணமாக சில தனியார் பள்ளிகள் குறிப்பிட்ட மாணவ, மாணவியர்களை பள்ளியிலிருந்து சஸ்பெண்ட் செய்து இருப்பதாகவும் வரும் தகவல்களை பார்க்கும்போது, தமிழகம் தற்போது மிகவும் அபாயகரமான சூழ்நிலையில் இருப்பதாக தெரியவருகிறது. இது போன்ற செய்திகள் தமிழக அரசின் கவனத்திற்கு வருகிறதா? இவற்றை தமிழக அரசு கண்காணிக்கிறதா? இல்லை கண்டும் காணாமல் இருக்கிறார்களா? இவற்றையெல்லாம் திமுக அரசால் ஏன் தடுக்க முடியவில்லை? என்றும் தெரியவில்லை.

மாணவர்கள் சஸ்பெண்ட்
இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து பள்ளிகளிலும், மாணவ மாணவியர்கள் இந்த குறிப்பிட்ட பிரச்சனை தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு, இந்த பிரச்சனையை மறைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இவற்றையெல்லாம் ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்து பார்த்தாலே போதும், எந்த அளவுக்கு தமிழகத்தில் போதை பொருட்களின் ஆதிக்கம் தற்போது இருக்கிறது என்ற உண்மை புலப்படும். மேலும், பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் பங்கு மிகவும் அத்தியாவசியமானது.

அமைச்சர்கள், அதிகாரிகளின் பொறுப்பு
ஒவ்வொரு மாணவ, மாணவியர்களின் அன்றாட நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து, அவர்கள் ஏதாவது தவறான பாதையில் செல்கிறார்களா? என்பதை கண்டறிந்து, அவர்களுடைய பெற்றோர்களின் கவனத்திற்கு உடனே கொண்டு செல்ல வேண்டும். மாணவச் செல்வங்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் நேரடியாக தலையிட்டு இதை உடனே சரிசெய்யவேண்டிய பொறுப்பு அதிகம் இருக்கிறது. தமிழக காவல்துறையினர் யாருடைய புற அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் நேர்மையாக செயலாற்றி, இது போன்ற சட்டவிரோத செயல்களில் யார் சம்பந்தபட்டு இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் நிலவும் போதை பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

இரும்புக்கரம் கொண்டு
போதைப் பொருட்கள் இல்லா மாநிலம் என்ற நிலையை தமிழகம் அடைந்திட வேண்டும். இது வருங்கால நம் சந்ததியினருக்கு பேருதவியாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் ஏற்கனவே பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தங்கள் வாழ்க்கையை நடத்த போராடி வரும் வேளையில், போதை பொருட்களின் ஆதிக்கத்தால் மிகவும் கலக்கமடைந்து இருக்கிறார்கள். எனவே திமுக தலைமையிலான அரசு, நம் இளம் சமுதாயத்தினரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போதை பொருட்களின் நடமாட்டத்தை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications