கேஸ் போட்டாலும்.. வாடகை கட்டணும்.. வீட்டு வாடகைதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம்.. முக்கிய உத்தரவு
சென்னை: வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி ஒருவர் தான் வசிக்கும் வாடகை வீட்டிற்கு வாடகை கட்டாமல் இருக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
மேல்முறையீடு நிலுவையில் இருப்பதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட வாடகையை செலுத்தாமல் இருக்க முடியாது.. வாடகைதாரர் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும் என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்துள்ளது. மேல்முறையீடு செய்வது உத்தரவின் செயல்பாட்டை நிறுத்தாது என்றும், தடை உத்தரவு மட்டுமே அதை நிறுத்திவைக்க முடியும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

வாடகைதாரர் தடை
இந்த வழக்கில், வாடகைதாரர் ஒருபோதும் தடை உத்தரவைப் பெறாததால், அவர் முழு வாடகையையும் செலுத்த சட்டப்படி கடமைப்பட்டிருந்தார். அதைச் செய்யத் தவறியது வேண்டுமென்றே செய்த தவறு எனக் கருதப்பட்டது.
இந்த வழக்கு கோவையில் உள்ள ஒரு வணிகக் கிடங்கு சம்பந்தப்பட்டது. அதாவது வாடகை வீட்டு ஓனர் 48 ஆயிரம் வாடகை கேட்க, வாடகை எடுத்தவர் 33 ஆயிரம் மட்டுமே கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவே வழக்கு நடந்தது. மாத வாடகை ₹48,000 என்று நில உரிமையாளர் கோரிய நிலையில், வாடகைதாரர் ₹33,000 என வலியுறுத்தினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட வாடகை கட்டுப்பாட்டு அதிகாரி, பிப்ரவரி 2005 முதல் அமலுக்கு வரும் வகையில், பழைய வாடகை பாக்கியையும் சேர்த்து மாதத்திற்கு ₹2.43 லட்சம் நியாயமான வாடகையாக நிர்ணயித்தார்.
வாடகைதாரர் உடனடியாக மேல்முறையீடு செய்தாலும், இந்த உத்தரவுக்குத் தடை கோரவில்லை. மேல்முறையீடு நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தபோதும், வாடகைதாரர் நிர்ணயிக்கப்பட்ட தொகையில் ஒரு பகுதியை மட்டுமே தொடர்ந்து செலுத்தினார். அதாவது கோர்ட் சொன்னதை கட்டவில்லை.
மேல்முறையீட்டு அதிகாரியும், பின்னர் சென்னை உயர் நீதிமன்றமும் வீட்டு ஓனரின் வாடகையை மாற்றங்களுடன் உறுதிப்படுத்தின. ஆனால், மீண்டும் பல ஆண்டுகளாகக் குவிந்திருந்த பெரும் தொகையை வாடகைதாரர் செலுத்தத் தவறினார்.
வாடகைதாரரை வெளியேற்றக் கோரி மனு
2012-ல் உச்ச நீதிமன்றம் வாடகைதாரரின் மனுவைத் தள்ளுபடி செய்த பின்னரும் கூட 2013-க்குள் செலுத்தப்படாத வாடகை ₹1.22 கோடியைத் தாண்டியது. இதன் விளைவாக, வேண்டுமென்றே செய்த தவறு என்ற அடிப்படையில் நில உரிமையாளர் வாடகைதாரரை வெளியேற்றக் கோரி மனு தாக்கல் செய்தார்.
ஆரம்பத்தில் வாடகை கட்டுப்பாட்டு அதிகாரி வெளியேற்ற மனுவை நிராகரித்தாலும், மேல்முறையீட்டு அதிகாரி 2020-ல் அதைத் தள்ளுபடி செய்தார். பின்னர், 2021-ல் சென்னை உயர் நீதிமன்றம் இந்த முடிவை உறுதிப்படுத்தியது. இதை எதிர்த்து வாடகைதாரரின் சட்டப்பூர்வ வாரிசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
வாடகைத் தொகை குறித்து வாடகைதாரருக்கு எந்தவொரு உண்மையான குழப்பமும் இல்லை என்பதைக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், வெளியேற்ற உத்தரவை உறுதிப்படுத்தியது. ஒருவர் மேல்முறையீடு செய்து, தடை கோராதபோது, உத்தரவைச் செயல்படுத்துவதில் ஆட்சேபனை இல்லை என்று பொருள் என நீதிமன்றம் கூறியது.
ஆகவே, வாடகைதாரர் நியாயமான வாடகையை நிர்ணயிக்கப்பட்ட நாளிலிருந்து செலுத்தக் கடமைப்பட்டவர். நிலுவையிலுள்ள வழக்கை, கட்டணங்களை தாமதப்படுத்த ஒரு காரணமாகப் பயன்படுத்த முடியாது என்று அமர்வு குறிப்பிட்டது. நீங்கள் வழக்கு தொடுத்தாலும் இடையில் வாடகை கட்டியே ஆக வேண்டும் என்று உத்தரவிட்டது.
நீதிமன்றம் வாடகையை நிர்ணயித்த பிறகு, உயர் நீதிமன்றம் உத்தரவை நிறுத்திவைக்கும் வரை அந்தத் தொகை செலுத்தப்பட வேண்டும். பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல், வாடகைதாரர் நில உரிமையாளரை கொடுமைப்படுத்தி உள்ளார். .
இந்தக் கருத்துக்களுடன், உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்ததுடன், வெளியேற்ற உத்தரவையும் உறுதிப்படுத்தியது. வாடகைதாரர் நீண்ட காலமாகப் பணம் செலுத்தாததை வேண்டுமென்றே செய்த தவறு என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.












Click it and Unblock the Notifications