Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்! மாணவர்களுக்கு டைம் டேபிள் சர்ப்ரைஸ்! எந்த நாள் பீரியட் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிட்வா புயல் காரணமாக, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு டிச. 2, 3, 4 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்று மழை சற்று ஓய்ந்திருந்ததால், பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று பள்ளிகள் செயல்படும் என்று தமிழக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் இன்று, டிசம்பர் 6, வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

தற்போது தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.. அவ்வப்போது புயல் பற்றின அறிவிப்புகளும் வெளியாகி கிலியை தந்து கொண்டிருக்கின்றன..

Chennai Schools Students

டிட்வா புயல்

கடந்த சில தினங்களுக்கு முன்பு, இலங்கை அருகே உருவான டிட்வா புயலானது, அந்த நாட்டையே கடுமையாக தாக்கியது. சூறைக்காற்று, ஆலங்கட்டி மழை, தொடர்ந்த கனமழை காரணமாக இலங்கை முழுவதும் வெள்ளப்பேரிடர் ஏற்பட்டது.

இந்த பேரிடரில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல வீடுகள், சாலைகள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட பல உட்கட்டமைப்புகள் பெரிதும் சேதமடைந்தன.

சென்னையில் மழை

இலங்கையை தாக்கிய இந்த புயலானது, தமிழக கடற்கரையை ஒட்டி வட தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு நகர்ந்தது. இதன் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.

குறிப்பாக சென்னையில் பல பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்.. சில இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

மழை மற்றும் வெள்ள சூழ்நிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 2, 3, 4 ஆகிய மூன்று நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் பாடத்திட்டம் பாதிக்கப்படும் நிலைமையும் உருவானது..

பள்ளிகள் இன்று செயல்படும்

எனவேதான், இதனை சமன் செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயங்க வைக்க கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. அதன்படி, டிசம்பர் 2ம் தேதி வழங்கப்பட்ட விடுமுறைக்கு பதிலாக இன்று அதாவது சனிக்கிழமை, டிசம்பர் 6-ம் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் வழக்கமான தொடக்க நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், வழக்கம்போலவே பாடநேரம் நடைபெறும் என்றும் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பிற விடுமுறைகளுக்கும் மாற்று நாட்கள் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

டைம்டேபிள் இதுதான்

இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "மழை காரணமாக நடப்பு வாரத்தில் தொடர்ந்து மூன்று நாள்கள் விடுமுறை விடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், பள்ளி மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், டிசம்பர் 2ம் தேதி மழை விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிச. 6ம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் வழக்கம் போல செயல்படும்.. புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி பள்ளிகள் இன்று செயல்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது மாணவர், பெற்றோர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+