Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

15 பேருக்கு தூக்கு.. ஆர்எஸ்எஸ் கொலைகார கும்பல் வெளியே! முஸ்லிம்களுக்கு அநீதி - தெகலான் பாகவி காட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளாவில் எஸ்டிபிஐ மாநில நிர்வாகி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு இன்னும் மந்த நிலை தொடரும் சூழலில் பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது இரட்டை நிலையாக இருப்பதாக எஸ்டிபிஐ மூத்த தலைவ்ர் தெகலான் பாகவி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது, "ஷான் படுகொலை வழக்கின் மந்த நிலையும் ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொலை வழக்கில் விரைவான தீர்ப்பும்! ஏன் இந்த இரட்டைநிலை? கடந்த 2021 டிசம்பர் 18 ஆம் தேதி எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநில செயலாளர் KS ஷான் மதவெறி பிடித்த RSS கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 13 RSS இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். ஷான் படுகொலை செய்யப்பட்ட அதே நாளில் RSS இயக்கத்தை சார்ந்த ரஞ்சித் ஸ்ரீனிவாசன் என்பவரும் படுகொலை செய்யப்பட்டார்.

SDPI senior leader Dhehlan Baqavi has questioned death sentence to 15 people

அந்த வழக்கில் 30 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். எஸ்டிபிஐ மாநில செயலாளர் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் சில மாதங்களில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை எந்த முன்னேற்றமும் இல்லாமல் தொய்வு நிலையிலேயே உள்ளது. வழக்கில் பப்ளிக் ப்ராக்ஸ்க்யூட்டரை உடனே நியமிக்க வேண்டும் . வழக்கை விரைவு படுத்தவேண்டும் என பல போராட்டங்களை எஸ்டிபிஐ கட்சி முன்னெடுத்தும் வழக்கை விரைவுப்படுத்துவதற்கு ஆளும் சிபிஎம் அரசு எந்த முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை.

பல போராட்டங்களுக்குப் பிறகு இப்போதுதான் பிபி நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் ஆர்எஸ்எஸ் நிர்வாகி ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு இரண்டு வருடங்கள் கழிந்த பிறகும் இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிராக வழக்கு விரைவு படுத்தப்பட்டு இன்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் 15 முஸ்லிம்களுக்கு மரண தண்டனை விதித்து மாவட்ட நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் கண் முன்னே நடந்த எத்தனை கொடூர குற்றங்களுக்கு இது மாதிரியான தீர்ப்பு நீதிமன்றங்களால் வழங்கப்பட்டு உள்ளது. குஜராத்திலும் மற்றும் நாடு முழுவதும் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளால் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புகள் என்ன? எத்தனை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு மட்டும் நீதியின் பெயரால் இத்தகைய அநீதிகள் ஏன் இழைக்கப்படுகிறது. இதுதான் நாடு முழுவதும் முஸ்லிம்கள் சந்தித்து வருகின்ற இரட்டை நீதி." என்று குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+