15 பேருக்கு தூக்கு.. ஆர்எஸ்எஸ் கொலைகார கும்பல் வெளியே! முஸ்லிம்களுக்கு அநீதி - தெகலான் பாகவி காட்டம்
சென்னை: கேரளாவில் எஸ்டிபிஐ மாநில நிர்வாகி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு இன்னும் மந்த நிலை தொடரும் சூழலில் பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது இரட்டை நிலையாக இருப்பதாக எஸ்டிபிஐ மூத்த தலைவ்ர் தெகலான் பாகவி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது, "ஷான் படுகொலை வழக்கின் மந்த நிலையும் ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொலை வழக்கில் விரைவான தீர்ப்பும்! ஏன் இந்த இரட்டைநிலை? கடந்த 2021 டிசம்பர் 18 ஆம் தேதி எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநில செயலாளர் KS ஷான் மதவெறி பிடித்த RSS கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 13 RSS இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். ஷான் படுகொலை செய்யப்பட்ட அதே நாளில் RSS இயக்கத்தை சார்ந்த ரஞ்சித் ஸ்ரீனிவாசன் என்பவரும் படுகொலை செய்யப்பட்டார்.

அந்த வழக்கில் 30 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். எஸ்டிபிஐ மாநில செயலாளர் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் சில மாதங்களில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை எந்த முன்னேற்றமும் இல்லாமல் தொய்வு நிலையிலேயே உள்ளது. வழக்கில் பப்ளிக் ப்ராக்ஸ்க்யூட்டரை உடனே நியமிக்க வேண்டும் . வழக்கை விரைவு படுத்தவேண்டும் என பல போராட்டங்களை எஸ்டிபிஐ கட்சி முன்னெடுத்தும் வழக்கை விரைவுப்படுத்துவதற்கு ஆளும் சிபிஎம் அரசு எந்த முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை.
பல போராட்டங்களுக்குப் பிறகு இப்போதுதான் பிபி நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் ஆர்எஸ்எஸ் நிர்வாகி ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு இரண்டு வருடங்கள் கழிந்த பிறகும் இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிராக வழக்கு விரைவு படுத்தப்பட்டு இன்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் 15 முஸ்லிம்களுக்கு மரண தண்டனை விதித்து மாவட்ட நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் கண் முன்னே நடந்த எத்தனை கொடூர குற்றங்களுக்கு இது மாதிரியான தீர்ப்பு நீதிமன்றங்களால் வழங்கப்பட்டு உள்ளது. குஜராத்திலும் மற்றும் நாடு முழுவதும் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளால் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புகள் என்ன? எத்தனை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு மட்டும் நீதியின் பெயரால் இத்தகைய அநீதிகள் ஏன் இழைக்கப்படுகிறது. இதுதான் நாடு முழுவதும் முஸ்லிம்கள் சந்தித்து வருகின்ற இரட்டை நீதி." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications