15 பேருக்கு தூக்கு.. ஆர்எஸ்எஸ் கொலைகார கும்பல் வெளியே! முஸ்லிம்களுக்கு அநீதி - தெகலான் பாகவி காட்டம்
சென்னை: கேரளாவில் எஸ்டிபிஐ மாநில நிர்வாகி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு இன்னும் மந்த நிலை தொடரும் சூழலில் பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது இரட்டை நிலையாக இருப்பதாக எஸ்டிபிஐ மூத்த தலைவ்ர் தெகலான் பாகவி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது, "ஷான் படுகொலை வழக்கின் மந்த நிலையும் ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொலை வழக்கில் விரைவான தீர்ப்பும்! ஏன் இந்த இரட்டைநிலை? கடந்த 2021 டிசம்பர் 18 ஆம் தேதி எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநில செயலாளர் KS ஷான் மதவெறி பிடித்த RSS கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 13 RSS இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். ஷான் படுகொலை செய்யப்பட்ட அதே நாளில் RSS இயக்கத்தை சார்ந்த ரஞ்சித் ஸ்ரீனிவாசன் என்பவரும் படுகொலை செய்யப்பட்டார்.

அந்த வழக்கில் 30 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். எஸ்டிபிஐ மாநில செயலாளர் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் சில மாதங்களில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை எந்த முன்னேற்றமும் இல்லாமல் தொய்வு நிலையிலேயே உள்ளது. வழக்கில் பப்ளிக் ப்ராக்ஸ்க்யூட்டரை உடனே நியமிக்க வேண்டும் . வழக்கை விரைவு படுத்தவேண்டும் என பல போராட்டங்களை எஸ்டிபிஐ கட்சி முன்னெடுத்தும் வழக்கை விரைவுப்படுத்துவதற்கு ஆளும் சிபிஎம் அரசு எந்த முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை.
பல போராட்டங்களுக்குப் பிறகு இப்போதுதான் பிபி நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் ஆர்எஸ்எஸ் நிர்வாகி ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு இரண்டு வருடங்கள் கழிந்த பிறகும் இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிராக வழக்கு விரைவு படுத்தப்பட்டு இன்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் 15 முஸ்லிம்களுக்கு மரண தண்டனை விதித்து மாவட்ட நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் கண் முன்னே நடந்த எத்தனை கொடூர குற்றங்களுக்கு இது மாதிரியான தீர்ப்பு நீதிமன்றங்களால் வழங்கப்பட்டு உள்ளது. குஜராத்திலும் மற்றும் நாடு முழுவதும் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளால் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புகள் என்ன? எத்தனை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு மட்டும் நீதியின் பெயரால் இத்தகைய அநீதிகள் ஏன் இழைக்கப்படுகிறது. இதுதான் நாடு முழுவதும் முஸ்லிம்கள் சந்தித்து வருகின்ற இரட்டை நீதி." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications