தலைதூக்கும் 'மாவோயிஸ்டுகள்’-கேரளாவில் மீண்டும் துப்பாக்கி சண்டை- தமிழகம் முதுமலையில் தேடுதல் வேட்டை!
சென்னை: கேரளா மாநிலம் கண்ணூரில் போலீசாருடன் துப்பாக்கி சண்டை நடத்திய மாவோயிஸ்டுகள் தமிழ்நாட்டின் முதுமலை வனப்பகுதியில் பதுங்கி உள்ளனரா? என தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் முதல் கட்டமாக கடந்த நவம்பர் 7-ந் தேதி நடைபெற்றது. சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் செல்வாக்குள்ள பகுதிகளில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. ஆனால் இந்த தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்தும் பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க கோரியும் மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் மீதும் தேர்தல் அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில் கேரளாவின் வயநாடு வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் குழு ஒன்று பதுங்கி இருந்தது. இந்த குழுவை கடந்த வாரம் கேரளாவின் அதிரடிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது மாவோயிஸ்டுகளுக்கும் கேரளா போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த மோதலின் இறுதியில் 2 மாவோயிஸ்டுகள் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கேரளாவில் பிடிபட்ட மாவோயிஸ்டுகளிடம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மூன்று மாநில போலீசாரும் விசாரணை நடத்தினர். தமிழ்நாடு, கர்நாடகாவில் மாவோயிஸ்டுகள் செயல் திட்டம் என்ன? யாருடன் தொடர்பு எனவும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக அதிரடிப்படை போலீசாருக்கு புதிய தகவல்கள் கிடைத்தன. இதனடிப்படையில் உருப்பம்குற்றி வனப்பகுதியில் போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் போலீசார் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் எந்த மாவோயிஸ்டும் சிக்கவில்லை. போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை நடத்திய மாவோயிஸ்டுகள் தப்பி ஓடிவிட்டனர்.
இதனிடையே கேரளாவில் தப்பி ஓடிய மாவோயிஸ்டுகள் தமிழ்நாட்டின் முதுமலை வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளனரா? அல்லது மாவோயிஸ்டுகள் முதுமலை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளனரா? என்பதை கண்டறிய அப்பகுதியில் தமிழ்நாடு அதிரடிப்படை போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். தென்னிந்தியாவில் சில காலம் அமைதியாக இருந்த மாவோயிஸ்டுகள் மீண்டும் தலை தூக்கி இருப்பது பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications