Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த ‘சீக்ரெட்’ ரிப்போர்ட்.. 89வது ஆள் ஜமேஷா முபின்.. அண்ணாமலை ‘பகீர்’.. எல்லாமே கைக்கு போகுதாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : உளவுத்துறைக்கு அனுப்பப்பட்ட ரகசிய கடிதம் தன்னிடம் இருப்பதாகக் கூறிவந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதில் இருக்கும் பாயிண்டுகளை குறிப்பிட்டு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து முன்பே உளவுத்துறை, காவல்துறைக்கு எச்சரிக்கப்பட்டதாகவும், காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தியதன் காரணமாகவே கோவை சம்பவம் நடைபெற்றது என்றும் அண்ணாமலை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

கோவை சம்பவத்தில் தொடர்புடைய தகவல்கள் அண்ணாமலைக்கு முன்பே தெரிந்தது எப்படி என விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அண்ணாமலையின் இன்றைய அறிக்கையின் மூலம், காவல்துறையின் உயர்மட்ட ரகசிய தகவல்கள் அண்ணாமலையின் கைகளுக்குச் செல்வது தெளிவாவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

போலீஸ் அறிக்கை

போலீஸ் அறிக்கை

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக காவல்துறையின் மெத்தனமே இந்த சம்பவத்திற்குக் காரணம் எனக் குற்றம்சாட்டிய நிலையில், அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலடியாக காவல்துறை சார்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசாங்கங்களுக்கு குண்டு வெடிக்கப் போவதாக முன்கூட்டியே எச்சரித்ததாகவும் காவல்துறை அதை அலட்சியப்படுத்தியதாகவும் அண்ணாமலை பொய்ப் பழி சுமத்துவதாக காவல்துறையின் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அண்ணாமலை அதிர்ச்சி தகவல்

அண்ணாமலை அதிர்ச்சி தகவல்

இந்நிலையில், தமிழக காவல்துறையின் அறிக்கைக்கு பதில் கொடுத்து ஒரு நீண்ட அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார் அண்ணாமலை. கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறை அளித்த அறிக்கையில், தன் மீது வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை. அதில், மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கை குறித்து தெரிவித்துள்ளார் அண்ணாமலை. மேலும், இன்னொரு குண்டையும் தூக்கிப் போட்டுள்ளார்.

89ஆம் இடத்தில் ஜமேஷா முபீன்

89ஆம் இடத்தில் ஜமேஷா முபீன்

கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதிக்கு முன்னரே ஜமேஷா முபீன் பற்றிய தகவல்கள் காவல்துறை தலைமை மற்றும் உளவுத்துறைக்கு காவல்துறையில் இயங்கும் ஒரு தனிப்பிரிவு வழங்கியுள்ளது. 945 நபர்களுக்கு ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும் மக்கள் கூடும் இடங்களில் இவர்கள் தனி நபராக திடீர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் ஒரு பட்டியலை கொடுத்துள்ளது அந்த தனிப்பிரிவு. அதில் ஜமேஷா முபீன் 89ஆம் இடத்தில் உள்ளார் எனக் கூறி அந்த அறிக்கையில் உள்ள அந்தப் பகுதியின் படத்தையும் வெளியிட்டு அதிர்ச்சி கிளப்பியுள்ளார் அண்ணாமலை.

கோட்டை விட்ட உளவுத்துறை?

கோட்டை விட்ட உளவுத்துறை?

ஜூலை மாதம் 19ஆம் தேதி கொடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கைக்கு பின்னரும் ஜமேஷா முபினை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வராமல் கோட்டை விட்டுள்ளது தமிழக காவல்துறையின் உளவுத்துறை. இந்த வருடம் செப்டம்பர் மாதம் முடியும் வரையில் கோவை நகரத்திற்கான உளவுத்துறை அதிகாரி நியமிக்கப்படாமல் இருந்தது பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு தான் அவசர அவசரமாக இந்த பணியிடம் திரப்பப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கிறது. இது தான் தமிழகத்தில் உளவுத்துறை செயல்படும் லட்சணம்." என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

அண்ணாமலை கைக்கு போகிறதா?

அண்ணாமலை கைக்கு போகிறதா?

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் தெரிவிக்கும் முன்பே சீக்ரெட்டான தகவல்கள் அண்ணாமலைக்குத் தெரியவந்தது எப்படி என்ற கேள்விகள் சமீபமாக எழுந்துவரும் நிலையில், உளவுத்துறைக்கு அனுப்பப்பட்ட சீக்ரெட் வார்னிங்கில் இடம்பெற்ற தகவல்கள் எனக் கூறி சிலவற்றையும் இன்று அண்ணாமலை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையில் அண்ணாமலைக்கு எப்படி கிடைக்கின்றன என்பது குறித்து அரசு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+