Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெயில் கொளுத்துது.. பள்ளிகளை ஜூன் 15க்குப் பிறகே திறக்க வேண்டும்.. அரசுக்கு சீமான் கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை : "தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. எனவே பள்ளிகளை ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து 15 நாட்கள் கழித்து திறக்க வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் மாதம் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதேபோல தான் நடப்பு ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5-ல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

Seeman urges government to reopen schools after june 15

ஆனால் தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தற்போதும் அதிகமாக உள்ளது. இதனால் பெரியவர்கள் கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளது. ஆகவே, தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளிப்போகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. எனவே பள்ளிகள் திறப்பதை மாற்றி அமைக்க வேண்டும். பள்ளிகளை ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து 15 நாட்கள் கழித்து திறக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Seeman urges government to reopen schools after june 15

முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸும் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 42 டிகிரி செல்சியசுக்கும் மேல் வெப்பம் வாட்டி வரும் நிலையில், அரசுப் பள்ளிகளை ஜூன் 1ஆம் தேதி திறப்பது எந்த வகையில் நியாயம் என்று ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

ஆனால், தற்போது வரை பள்ளிக்கல்வித்துறை, ஜூன் 1ஆம் தேதி பள்ளிகளைத் திறப்பதில் உறுதியாக உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும். ஜூன் 1ஆம் தேதி ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும். ஜூன் 5ஆம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும்" என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+