Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீமான் போட்ட ட்வீட்.. "உரிமையுடன் அழைக்கிறேன்".. ரெடியாகும் நாம் தமிழர் கட்சி தம்பிகள்..!

பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு குருதி கொடை வழங்க அழைப்பு விடுத்துள்ளார் சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு, குருதிகொடை வழங்க, தன் தம்பிகளுக்கு உரிமையோடு அழைப்பு விடுத்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

நாம் தமிழர் கட்சி சார்பில், பிரபாகரன் பிறந்த நாளுக்கு வருடா வருடம் தொண்டர்கள் ரத்த தானம் செய்வது வழக்கம். அவ்வாறு தானமாக அளிக்கும் ரத்தங்களை சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களுக்கு அளிப்பார்கள்.

இப்படி ரத்த தானத்திற்காகவே நாம் தமிழர் கட்சி "குருதி கொடை பாசறை" என்ற ஒன்றை இயக்கி வருகிறது. இப்படி ஒரு பாசறை மற்ற கட்சிகளில் இருக்கிறதா, இல்லையா, அவை செயல்பாட்டில்தான் உள்ளனவா என்று தெரியாது. ஆனால் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் இதை தீவிரமாக கையில் எடுத்து செய்து வருகிறார்கள்.

 ரத்த தானம்

ரத்த தானம்

கடந்த வருடம் ஒரு சம்பவம் நந்தது.. சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் எப்போதுமே கைவசம் இருக்கும் ரத்தம் தீர்ந்து போய்விட்டதாகவும், இதனால் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் பரவியது.. ஸ்டாக்கில் ரத்தம் இல்லை என்றதும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் "நம் இரத்த உறவுகளைக் காக்க நம் இரத்தத்தினைக் கொடையாகத் தருவோம்" என்று குருதிக்கொடைப் பாசறை வாயிலாக நாம் தமிழர் உறவுகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 குருதிக்கொடை பாசறை

குருதிக்கொடை பாசறை

அதன்படி 500-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கடந்த 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ரத்த தானம் அளித்திருந்தனர். இவ்வாறு குருதிக்கொடை பாசறை மூலமாக சேகரிக்கப்பட்ட 346 யூனிட் ரத்தத்தை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு அளித்தனர். இதற்காக தான் ஆஸ்பத்திரி சீமானை மனமார பாராட்டியும் இருந்தது. இந்நிலையில் சீமான் மறுபடியும் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அது தொடர்பான அறிக்கையும் விடுத்துள்ளார்.. பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு, குருதிகொடை அளிக்க தன் தம்பிகளுக்கு உரிமையோடு அழைப்பு விடுத்துள்ளார்.. அதன் விவரம் இதுதான்:

 ட்வீட் - அறிக்கை

ட்வீட் - அறிக்கை

"தமிழ்த் தேசிய இனத்தின் முகமாக முகவரியாக விளங்கும் தன்னிகரில்லா தமிழ்த்தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 26 அன்று, உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ் உறவுகள் அந்நாளைச் சிறப்பாகக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் தமிழர் கட்சி சார்பாகச் சிறப்பான முன்னெடுப்புகளை எப்போதும் போலத் தொடங்கியிருக்கிறோம்.

உறுதி

உறுதி

தலைவர் பிறந்த நாளினை தமிழர் எழுச்சி நாளாகப் போற்றி, இன விடுதலைக்குச் சூளுரைக்க உறுதியேற்கும் விதமாக, வருகின்ற 26-11-2021 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதிக்குட்பட்ட செங்குன்றம் நெல் மற்றும் அரிசி மொத்த வியாபாரிகள் சங்க திருமண மாளிகையில் தமிழர் எழுச்சி நாள் விழா கொண்டாடப்படவிருக்கின்றது.

பேரிடர்

பேரிடர்

அதேபோன்று, ஒவ்வொரு ஆண்டும் நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறை மற்றும் குருதிக்கொடைப் பாசறை இணைந்து, தமிழகமெங்கும் முன்னெடுத்துவரும் குருதிக்கொடை வழங்கும் முகாம்களில் இவ்வாண்டும் நாம் தமிழர் கட்சியின் உறவுகள் பெருந்திரளாக உணர்வெழுச்சியுடன் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கிறேன். தொற்றுநோய் பேரிடர் காலமான இக்காலத்தில் நாம் வழங்கும் குருதி, பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களின் உயிர் காக்க உதவுகிறது.

 பற்றுறுதி

பற்றுறுதி

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலேயே அதிகளவில் குருதிக்கொடை தருகிற அரசியல் அமைப்பாக நாம் தமிழர் கட்சி தான் திகழ்கிறது என்பதை அங்கீகரிக்கும் விதமாக குருதிக்கொடை பெறுகின்ற தொண்டார்வ நிறுவனங்கள் நற்சான்றிதழ்கள் அளிக்கின்றன. அவ்வகையில் தமிழ்த்தேசிய இன விடுதலைக்காக, குருதி சிந்தி காத்திட்ட மாவீரர்களின் மாசற்ற தலைவனின் பிறந்த நாளில்.. மக்கள் உயிர் காக்க நம் குருதியைக் கொடையாகத் தந்து நம் இனத்தின் மீதான பற்றுறுதியை இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டிட வேண்டும் என உரிமையோடு அழைக்கின்றேன்.

முகாம்

முகாம்

குறிப்பு: தங்கள் பகுதிகளில் குருதிக்கொடை முகாமை முன்னெடுத்து நடத்தும் பொறுப்பாளர்கள் முகாம் நடைபெறும் நாள், இடம், மாவட்டம், தொகுதி, பொறுப்பாளர் மற்றும் முகாம்களில் குருதிக்கொடை வழங்குபவர்களின் பெயர், வயது, குருதிப் பிரிவு மற்றும் தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக தலைமை அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தவும்.

சான்றிதழ்கள்

சான்றிதழ்கள்

குருதிக்கொடைப் பாசறை சார்பாக குருதிக்கொடையாளர்களுக்கு வழங்கவேண்டிய 'உயிர்நேய மாண்பாளர்' சான்றிதழ்களை மொத்தமாகப் பெற்றுக்கொள்ள, முகாம்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பாளர்கள் கீழ்காணும் பொறுப்பாளர்களைத் தொடர்புகொள்ளவும். சான்றிதழ்கள் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

 பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

குருதிக்கொடை சான்றிதழ் அனுப்பும் பொறுப்பாளர்கள்: சென்னை சுகுமார் - 9841186128, மணி - 8122540511, நித்தியானந்தம் - 8428862623, மேலும் தொடர்புக்கு: அரிமா மு.ப.செந்தில்நாதன் (+91-7667412345 / 8825413664) குருதிக்கொடைப் பாசறை - மாநில ஒருங்கிணைப்பாளர்.. மாவீரர் சிந்திய குருதி.. வெல்வது உறுதி" என்று அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+