அது தெரியாது! ஆனா ஜோதிமணியும், தவெக அருண்ராஜும் சந்தித்தது ஏன்? செல்வப்பெருந்தகை விளக்கம்
சென்னை: கரூர் எம்பி ஜோதிமணியும் தவெக நிர்வாகி அருண்ராஜும் சந்தித்தது ஏன் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கியுள்ளார். அது போல் விஜய்- பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு குறித்தும் அவர் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் நினைவு நாளான இன்று சென்னையில் உள்ள அவரது சிலைக்கு, செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் விஜய்- பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செல்வப்பெருந்தகை பதில் அளிக்கையில் தவெக தலைவர் விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து எனக்கு தெரியாது.
திமுகவுடன் காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு பேச்சு நடத்தி வருகிறது. இதுதான் எங்களுக்குத் தெரியும். விஜய்யுடன் பேசுங்கள் என அகில இந்திய தலைமை எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவர்த்திக்கு நாங்கள் அனுமதியும் தரவில்லை என்றார். மேலும் ஜோதிமணியும் தவெக நிர்வாகி அருண்ராஜும் சந்தித்ததும் தற்செயலானது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.ராகுல் - விஜய் சந்திப்பு குறித்து யூகங்கள் எழுந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் கரூரில் அந்த தொகுதி எம்பி ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "அவரிடம் காங்கிரஸ் முன்னாள் ராகுல் காந்தியை சந்தித்து விஜய் பேசியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளதே" என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
ஜோதிமணி பதில் அளிக்கையில், விஜய் ஒன்றும் காங்கிரஸ் கட்சிக்கு புதியவர் அல்ல. 2010ஆம் ஆண்டு ராகுலை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.
அந்த இணைப்பு என்பது பல்வேறு காரணங்களால் நடக்கவில்லை. எனவே விஜய் ஒன்றும் எங்களுக்கு தெரியாதவர் அல்ல. கரூர் கூட்ட நெரிசல் போன்ற துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடக்கும் போது தலைவர்கள் பேசுவது இயல்புதான். ஆனால் அதையே தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமாக சொல்லிவிட முடியாது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீண்ட காலமாக இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. எனவே சமூகவலைதளங்களில் வருவதெல்லாம் அரசியல் கட்சிகளின் முடிவு என நாம் நினைக்கக் கூடாது. இவ்வாறு ஜோதிமணி தெரிவித்திருந்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications