சீமானுக்கு வந்த சோதனையை பாருங்க! வீரலட்சுமி கொடுக்கும் குடைச்சல் போதாதென்று செங்கை பத்மநாபன்!
சென்னை: மொழியை கேடயமாக பயன்படுத்தும் நேர்மையற்ற வறண்ட பாலைவனம் சீமான் என நமதுரிமை காக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் செங்கை பத்மநாபன் விமர்சித்துள்ளார்.
நமதுரிமை காக்கும் கட்சி என்ற பெயரில் தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சி இருப்பதே இப்போது தான் தெரிகிறது. சீமானின் நேரமோ என்னமோ தெரியவில்லை ஏற்கனவே அரசியல் ரீதியாக வீரலட்சுமி குடைச்சல் கொடுத்து வரும் நிலையில் இப்போது அந்த வரிசையில் லேட்டஸ்ட் வரவாக இணைந்துள்ளார் செங்கை பத்மநாபன். சீமான் மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்து நமதுரிமை காக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் செங்கை பத்மநாபன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு;

''தமிழக அரசின் ரூ,1000 மகளிர் உரிமை திட்டத்தில் சில குளறுபடிகள் இருப்பதை மறுக்க இயலாது. அது சரி செய்யப் படவேண்டியவை. அதற்காக அந்த நல்ல திட்டத்தை விமர்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதை போன்றே வறுமையில்வாழும் பெண்களுக்கான 100 நாள் வேலை திட்டத்தையும் இழிவாக கொச்சைபடுத்தி பேச்சுவது ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாதது. ''
''தன்னுடைய இதயத்தில் பல பெண்களுக்கு இடம் கொடுத்ததால் பெண் உரிமை பேச சீமான் தகுதியானவரா? பொருளாதார ரீதியாக பாலியல் ரீதியாக கருகொலை குற்றச்சாட்டு கொண்ட சீமான் மகளிர் உரிமை பாதுகாவலரா? சிந்திப்பீர். எதற்கு எடுத்தாலும் தகுதியை பற்றி பேசும் சீமான், 60து ஆண்டுகளாக காங்கிரஸ், 15து ஆண்டுகளாக பிஜேபி, 50து ஆண்டுகளாக திராவிட கட்சிகள் என்ன கிழித்தது என்று விமர்சனம் செய்வதற்கு முன் 60 வயது சீமான் வீட்டுக்கு வாடகை கட்டபிச்சை எடுக்கிறேன் என்று அவரே கூறியுள்ளார்.''
''தனி தகுதியற்று பேராசை கொண்டு தமிழகத்தை உறிஞ்சி குடிக்க திட்டமிட்டு மொழியை கேடயமாக பயன்படுத்தும் நேர்மையற்ற வறண்ட பாலைவனம் சீமான். உமது ஓநாய் சூழ்ச்சியை நேர்மையான தமிழ் தேசியவாதிகள் ஏற்க மாட்டார்கள். நமதுரிமை காக்கும் கட்சியும் ஏற்காது. '' இவ்வாறு அவர் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications