Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புலிக்கு வாலாக இருக்கலாம்.. ஆனால் எலிக்கு தலையாக இருக்க கூடாது.. செங்கோட்டையன் பற்றி ஜெயக்குமார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணன் செங்கோட்டையன் எங்கிருந்தாலும் வாழ்க என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்தியுள்ளார். புலிக்கு வாலாக இருக்கலாம்.. ஆனால் எலிக்கு தலையாக இருக்க கூடாது என்று கூறிய ஜெயக்குமார், செத்தாலும் அதிமுக கொடியுடன் தான் நான் போவேன் என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். தவெக நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மேற்கு மண்டலத்தின் 4 மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தவெகவுக்கு செங்கோட்டையனின் அனுபவம் உறுதுணையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Sengottaiyan joined TVK

அதேபோல் விஜய்யுடன் நேரடியாக கலந்தாலோசித்து செயல்படும் வகையில் செங்கோட்டையனுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுக ஆதரவு வாக்குகளை விஜய் பக்கம் திரும்ப வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் கொங்கு வேளாள கவுண்டர் சமூக வாக்குகளை செங்கோட்டையன் மூலமாக தவெக பிரிக்க வாய்ப்புகள் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் அதிமுகவில் இருந்து இன்னும் சிலரையும் தவெக பக்கம் கொண்டு செல்லும் பணிகளில் செங்கோட்டையன் ஈடுபடலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நான் பெரிதும் மதிக்கக் கூடியவர் அண்ணன் செங்கோட்டையன். அவர் ஒரு முடிவு எடுத்து தவெகவில் இணைந்துள்ளார்.

அதனால் ஒரு கருத்துதான் சொல்ல முடியும்.. எங்கிருந்தாலும் வாழ்க.. அதேபோல் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின் ஜெயக்குமாரும் செல்கிறார் என்று தகவல் வெளியாகியது. எனக்கு எப்போதும் ஒரே கட்சி தான்.. நேற்று, இன்று, நாளை.. ஏன் செத்தாலும் அதிமுக கொடியுடன் தான் செல்வேன். யார் வீட்டின் முன்பாகவும் சென்று காத்திருப்பவன் நான் அல்ல..

புலிக்கு வாலாக இருக்கலாம்.. ஆனால் எலிக்கு தலைவனாக இருக்க கூடாது.. இங்கே அதிமுக தான் புலி.. எலி என்று எந்தெந்த கட்சிகளை சொல்கிறேன் என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம். எனது வாழ்நாளில் புலிக்கு வாலாக இருப்பதையே பெருமையாக கருதுகிறேன். எலிக்கு தலையாக இருந்து பிரயோஜனம் கிடையாது. நான் திமுகவுக்கோ, தவெகவுக்கோ போக மாட்டேன். அது ஒருநாளும் நடக்காது..

அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தில் இருப்பதே எனக்கு பெருமை.. அதிமுக தான் சபாநாயகர், அமைச்சர், மாவட்டச் செயலாளர், மாணவரணி செயலாளர், எம்ஜிஆர் மன்ற செயலாளர் என்று 15க்கும் அதிகமாக பதவிகளை கொடுத்தது. அதனால் வாழ்நாள் முழுக்க எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகழை பாடும் வானம்பாடியாகவே இருப்பேன். வேறு எங்கும் செல்ல மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+