Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூத்த பத்திரிகையாளர் கே.எம்.சந்திரசேகரன் காலமானார்- சென்னை பத்திரிகையாளர் யூனியன் இரங்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூத்த பத்திரிகையாளர் கே.எம். சந்திரசேகரன் (வயது 56) சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் யூனியன் இரங்கல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் யூனியன் வெளியிட்ட செய்தி குறிப்பு:

Senior Jorunalist KM Chandrasekaran passes away

கே.எம்.சி என அழைக்கப்பட்ட மூத்த பத்திரிகையாளர் கே.எம். சந்திரசேகரன் (வயது 56) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று (8-3-2021) மாலை 6.30 மணிக்கு காலமானார். அவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.

பத்திரிகை துறையில் 30 ஆண்டுகாலம் அனுபவமிக்க கே.எம். சந்திரசேகர், "தினமணி' நாளிதழில் தலைமை செய்தியாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். கலைஞர் தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராக (இன்புட் எடிட்டர்) இருந்தவர். அண்மைக் காலமாக அக்குபஞ்சர் மருத்துவம் பார்த்து வந்தார். அவரது மறைவுக்கு சென்னைப் பத்திரிகையாளர் யூனியன் (MUJ) ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

(இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் நாளை நடைபெறுகிறது. தொடர்புக்கு. 9444126276

இவ்வாறு சென்னைப் பத்திரிகையாளர் யூனியன் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+