"வாழும் வரை எழுதுவேன்.. எழுதும் வரை வாழ்வேன்".. மூத்த பத்திரிகையாளர் "காகிதம்" ராஜன் திடீர் மரணம்
சென்னை: மூத்த பத்திரிகையாளர் பி.ராஜன் மாரடைப்பால் காலமானார்.. அவருக்கு வயது 64! மீடியா உலகமே அதிர்ந்து கிடக்கிறது.. இன்னும் யாராலும் நம்ப முடியவில்லை.. பி.ராஜன் மரணத்தையும் ஜீரணிக்க முடியவில்லை.
கிட்டத்தட்ட 40 வருஷங்களுக்கு மேல் பத்திரிகை துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர் ராஜன்.. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கோடைநாயக்கன்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர்..

நமது எம்ஜிஆர், மாலை தமிழகம், தமிழ் ஒளி, ஜெயா டிவியில் வேலை பார்த்தவர்.. அங்கு தனது பங்களிப்பை அர்ப்பணிப்பாக அளித்தவர்.
தமிழக சபாநாயகராக இருந்த டாக்டர் காளிமுத்துவிடம் பிஏ-வாக பணியாற்றியவர்... சட்டக்கேடயம் என்ற பத்திரிகை ஆசிரியரும்கூட.. இவர், காகிதம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.. அதனால் இவரை காகிதம் ராஜன் என்றும் சொல்வார்கள். "வாழும் வரை எழுதுவேன்.. எழுதும் வரை வாழுவேன்...காகிதம் வெல்லும்.. அதை காலம் சொல்லும்" என்று சொல்லி கொண்டே இருந்தவர்.
பழகும் விதமும் அலாதிதான்.. எல்லோரிடமும் யதார்த்தமாக பேசுவார்.. இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விட்டது.. அதனால் குடும்பத்தினர் பதறி போய் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. ஆனால் வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டது.. இந்த மரண செய்தி தமிழக பத்திரிகை உலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.
சென்னை நிருபர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்... இவரது மறைவுக்கு நிருபர்கள் சங்கம், தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட், பப்ளிக் ஜஸ்டிஸ் உள்ளிட்ட சங்கங்கள், அமைப்புகள் இரங்கலை தெரிவித்து வருகின்றன.
பப்ளிக் ஜஸ்டிஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "காகிதம் ராஜன் அவர்கள் மாரடைப்பால் மரணம் வாழும் வரை எழுதுவேன்.. எழுதும் வரை வாழுவேன்... காகிதம் வெல்லும்.. அதை காலம் சொல்லும்.. உடல் மண்ணுக்கு... உயிர் PEN க்கு... என்று வாழ்ந்து காட்டியவர் இறுதி மூச்சு வரை பத்திரிகையாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்.
அனைவரிடமும் எளிமையாக பழகும் குணம் படைத்தவர். பத்திரிகைத்துறை சிறந்த மனிதரை இழந்துள்ளது அவரது ஆத்மா இறைவன் திருவடியில் அமைதியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கல்" என்று தெரிவித்துள்ளது.
மறைந்த ராஜனுக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.. இவர்களில் 2 மகள்களுக்கு கல்யாணமாகிவிட்டது.. சோஷியல் மீடியாவில் ராஜனுக்கு அனுதாபங்களும், இரங்கலும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.. இன்னும் கொஞ்சம் காலம் இவர் இருந்திட கூடாதா? என்ற கேள்விகளுடன் கண்ணீர் பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன!
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications