அமைச்சர் பொன்முடி வீட்டில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை! காலை முதலே குவிந்து வரும் ஆதரவாளர்கள்!
சென்னை: அமலாக்கத்துறை வளையத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகளால் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு அதிகாலையில் வீட்டுக்கு அனுப்பப்பட்ட அமைச்சர் பொன்முடி, மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார்.

இந்நிலையில் அமைச்சர் பொன்முடியை நேரில் சந்திப்பதற்காக அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சி.வி.கணேசன் உள்ளிட்டோர் சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்றிருக்கின்றனர். அதேபோல் திமுக எம்.பி.யும், வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ உட்பட வழக்கறிஞர்கள் டீமும் பொன்முடி இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறது.
அமலக்காத்துறையின் அடுத்தக் கட்ட நகர்வு என்னவாக இருக்கும், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி என்.ஆர். இளங்கோ விளக்கிக் கூறிக்கொண்டிருக்கிறது. அதேபோல் நேற்றிலிருந்து தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள், அதிகாரிகள் தன்னிடம் நடந்துகொண்ட விதங்கள் குறித்தெல்லாம் சக அமைச்சர்களிடம் பொன்முடி கூறியிருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வந்துள்ள அமைச்சர் பொன்முடி ஆதரவாளர்கள் அவரது சைதாப்பேட்டை இல்லத்தில் குவிய ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையே பெங்களூரிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலினும் அலைபேசி மூலம் அமைச்சர் பொன்முடியை தொடர்பு கொண்டு பேசி தைரியம் அளித்திருக்கிறார்.
தமிழக அமைச்சரவையில் இதுவரை 4 பேர் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொண்டு வரும் நிலையில் அந்த லிஸ்டில் செந்தில்பாலாஜியுடன் பொன்முடியும் புதிதாக இணைந்திருக்கிறார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications