அடுத்தவாட்டி கேட்காதீங்க.. செந்தில் பாலாஜி கேஸில் ED விளக்கம் அளிக்க மேலும் 1 வாரம் டைம்: ஹைகோர்ட்
சென்னை: செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை விளக்கம் அளிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம் அளித்து செனனை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மறுபடியும் அவகாசம் கேட்கக் கூடாது என அமலாக்கத்துறைக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி மீது அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக 3 மோசடி வழக்குகளை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்தனர்.

விடுவிப்பு: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி.. இதையடுத்து, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், விடுவிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு வாரம் அவகாசம்: இந்த மனுவானது, இன்றைய தினம் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.. அப்போது, அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ் ஆஜராகி, பதில்மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, அவகாசம் வழங்கி விசாரணையை ஆகஸ்ட் 21ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள் அன்றைய தினம் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டுமெனவும், மீண்டும் அவகாசம் கேட்கக்கூடாது எனவும் அமலாக்கத்துறைக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
இன்று தீர்ப்பு: இதனிடையே, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஜாமீன்மனு விசாரணை முடிந்து இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகியிருந்த நிலையில், துஷார்மேத்தா கோர்ட்டில் ஆஜராகவில்லை.. இதனால் துஷார் மேத்தா ஆஜராவதற்கு, நேரம் கேட்கப்பட்டதால், வருகிறது 20ம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications