ஸ்டாலின் காலில் விழுந்து வணங்கிய செந்தில் பாலாஜி.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம் என உருக்கம்
சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி 471 நாட்களுக்கு பிறகு நேற்று ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வேளையில் முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றிருந்தார். இன்று டெல்லி பயணத்தை முடித்து சென்னை வந்தார். அப்போது ஸ்டாலினை சந்தித்த செந்தில் பாலாஜி அவரது காலில் விழுந்து வணங்கினார்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது வேலை தருவதாக கூறி லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரில் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு சோதனை மேற்கொண்டது. அதன்பிறகு கடந்த ஆண்டு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்ந்து செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி வந்தார். ஆனால் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்டவை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுத்து வந்தது. இதையடுத்து மீண்டும் மீண்டும் அவர் நீதிமன்றத்தை நாடியும் ஜாமீன் கிடைக்காமல் இருந்தது. இறுதியாக நேற்றைய தினம் டெல்லி உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து 471 நாள் சிறை வாசத்துக்கு பிறகு செந்தில் பாலாஜி ஜெயிலில் இருந்து வெளியே வந்தார். இதனை செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள், பிரியாணி வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
செந்தில் பாலாஜி நேற்று சிறையில் இருந்து மாலையில் தான் வெளியே வந்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் இல்லை. பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி சென்றிருந்தார். இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடி, சோனியா காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினார்.
இதையடுத்து இன்று இரவில் முதல்வர் ஸ்டாலின் விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய முதல்வர் ஸ்டாலினை அமைச்சர்கள், திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வரவேற்றனர். அங்கு செந்தில் பாலாஜியும் சென்றிருந்தார். முதல்வர் ஸ்டாலின் வந்தவுடன் செந்தில் பாலாஜி முதல் ஆளாக மஞ்சள் நிற சால்வையை வழங்கி அவரது காலில் விழுந்து வணங்கினார். அதன்பிறகு அவர் முதல்வர் ஸ்டாலின் அருகே செந்தில் பாலாஜி நின்றார். அதன்பிறகு மற்ற அமைச்சர்கள் முதல்வர் ஸ்டாலினை வரவேற்றனர்.

அதன்பிறகு ஸ்டாலின் உடனான சந்திப்பு பற்றி செந்தில் பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக குறிப்பிட்டு இருந்தார். அதில் ‛‛471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில். ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன் தலைவரே.! தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்.. உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்!'' என உருக்கமாக கூறியுள்ளார்.
முன்னதாக நேற்றைய தினம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தவுடன் முதல்வர் ஸ்டாலின் அவரை வரவேற்றும், புகழ்ந்தும் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், ‛‛ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜி 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன.
கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!'' என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி -
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி.. கேம் சேஞ்சர் ஸ்டாலின்.. திமுக பக்கா ஸ்கெட்ச் -
செந்தில் பாலாஜி கோவையில் போட்டியா.. ஆடிப்போன எஸ்.பி வேலுமணி.. செய்தியாளர் கேள்விக்கு மழுப்பல் பதில் -
கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. தங்கமணிக்கு எதிராக தாறுமாறாக வியூகம் அமைக்கும் செந்தில்பாலாஜி -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு












Click it and Unblock the Notifications