இன்று மாலை ஜெயிலில் இருந்து வெளியே வரும் செந்தில் பாலாஜி.. மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தகவல்!
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி இன்று தீர்ப்பளித்து உள்ளது உச்ச நீதிமன்றம். இன்று மாலை அல்லது நாளை காலை செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருவார் என திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். 471 நாள் சிறை வாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வருகிறார் செந்தில் பாலாஜி.
திமுக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, 2023, ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார். ஜாமீன் கோரி அவர் அளித்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்துவந்தன. இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு அளித்தார்.

கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வில் நடைபெற்றது. அமலாக்கத்துறையில் சார்பில் வாதாடிய சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் வழக்குப் பற்றிய சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு. செந்தில் பாலாஜி திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும், சாட்சிகளை கலைக்க எந்தவித முயற்சியும் மேற்கொள்ளக் கூடாது என்பது உள்ளிட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீண்ட காலமாக வெறும் விசாரணை கைதியாகவே இருப்பதனால், அடிப்படை உரிமை கருதி இந்த நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும், ரூபாய் 25 லட்சத்துக்கு இரு நபர் உத்தரவாதம் வழங்க வேண்டும் எனவும் அந்த நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞரான என்.ஆர் இளங்கோ.

செய்தியாளர்களைச் சந்தித்த மூத்த வழக்கறிஞரும், திமுக எம்.பியுமான என்.ஆர்.இளங்கோ கூறுகையில், "15 மாதங்களுக்கும் மேலாக வெறும் விசாரணை குற்றவாளியாக இருப்பதால் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தனி மனித அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில் ஜாமீன் வழங்காமல் இருப்பதை உச்ச நீதிமன்றம் சமீப காலமாகவே தொடர்ந்து கண்டித்து வருகிறது.
முதன்மை வழக்குகள் விசாரணை முடிந்து, அதன்பிறகு பணப் பரிமாற்ற மோசடி வழக்கை விசாரித்து முடிக்க நீண்ட காலமாகும், அது வரை அவரை சிறையில் வைத்திருக்க முடியாது என்பதால் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலை அல்லது நாளை காலை சிறையில் இருந்து வெளியே வருவார் செந்தில் பாலாஜி.
உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஜாமீன் உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கொடுத்து, 2 நபர்கள் ரூபாய் 25 லட்சத்துக்கான ஜாமீன் அளித்து, அதனை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, செந்தில் பாலாஜியை விடுதலை செய்ய சிறை அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கும். அவர் அமைச்சராக நியமிக்கப்பட எந்தவிதமான சட்டப்பூர்வ தடையும் இல்லை." என என்.ஆர்.இளங்கோ பேட்டி அளித்துள்ளார்.
-
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
விடிய விடிய அதிகாரிகள் சிறைபிடிப்பு! "இது கிரிமினல் தோல்வி" மேற்கு வங்க அரசை கண்டித்த உச்சநீதிமன்றம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்












Click it and Unblock the Notifications