சென்னையில் கரும்பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு...!
சென்னை: கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் மியூக்கோர்மைகோசிஸ் எனும் கரும்பூஞ்சை நோய் தொற்றால் பாதிப்புக்கு ஆளாகின்றனர். கரும்பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் எரிச்சல், கண் சிவத்தல், கண்களுக்கு கீழ் வலி, பார்வை குறைபாடு உள்ளிட்டவை கரும்பூஞ்சை தொற்றுக்கு முக்கிய அறிகுறியாகும்.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்து கருப்பூஞ்சையால் பாதிப்புக்குள்ளாகின்றனர். இணை நோய் உள்ளவர்கள் பூஞ்சை நோய்க்கு பாதிக்கப்படுகின்றனர். இதில் பெரும்பாலும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் மற்றும் நீரிலிவு நோய் உள்ளவர்களுக்கு கண்களில் கரும்பூஞ்சை நோய் தாக்கம் கண்டறியப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் தற்போது சுமார் 518 பேர் கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 17 பேர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேர் வெற்றிகரமாக சிகிச்சை பெற்று வீடுத்திரும்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் கரும்பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சையளிக்க தனி வார்டுகளை அமைத்து வருகின்றனர். முதல் முறையாக சென்னையின் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், 13 மருத்துவர்களும், ஆறு படுக்கைகள் கொண்ட தனி வார்டு திறக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கரும்பூஞ்சை தொற்றுக்கு தனி வார்டு அமைக்கப்படும் என சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications