என்னாது சோகமா? ஜெயில்ல இருந்து வந்தும் ஹேமந்த் திருந்தலை.. 11 பெண்களோட உல்லாசம்.. நடிகை சித்ரா தோழி திடுக்
சென்னை: பொண்டாட்டி செத்த சோகம் எங்காவது ஹேமந்த் முகத்தில் இருக்கா பாருங்கள். இவ்வளவு ஏன் ஜெயில்ல இருந்து வந்ததும் 11 பெண்களோட உல்லாசமாக இருந்திருக்கிறார் என சின்னத்திரை நடிகை சித்ராவின் தோழி ரேகா நாயர் பகீர் கிளப்பியுள்ளார்.
சித்ரா மரணித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த விவகாரம் தற்கொலையா கொலையா, தற்கொலை என்றால் எதற்காக தற்கொலை, கொலை என்றால் யார் எதற்காக என்பது குறித்த தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை.
ஆனால் சித்ராவின் தோழி, ஹேமந்த்தின் நண்பர் உள்ளிட்டோர் சித்ரா மரணம் தொடர்பாக ஊடகங்களுக்கு சில பேட்டிகளை அளித்து வருகிறார்கள். அந்த வகையில் ஹேமந்த் நல்லவனே இல்லை என கூறும் ரேகா நாயர் பல பகீர் தகவல்களை கூறியுள்ளார்.

ஹேமந்த்
ஹேமந்த் பாதுகாப்பு கேட்டு போலீஸில் மனு கொடுத்த நிலையில் தற்போது இந்த விவகாரங்கள் மீண்டும் தோண்டியெடுக்கப்படுகிறது. இதுகுறித்து ஒரு ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ஹேமந்த் உண்மையானவரே கிடையாது. அயோக்கியத்தனம், பிராடு, பொய், பித்தலாட்டம் இதுதான் அவரது குணம். வேலை இல்லை, புகழ் இல்லை, சித்ராவுக்கு எப்படி இவரை பிடித்தது என்பது கூட எனக்கு வியப்பாக இருக்கிறது.

2.45 கோடி ரூபாய்
ஹேமந்திற்கு அவரது நண்பர்கள் ரூ 2.45 கோடி வரை கொடுத்துள்ளார்களாம். அது போல் நகையும் பல சவரன்களை ஏமாற்றி ஹேமந்த் வாங்கியுள்ளாராம். ஜெயிலில் இருந்து வந்தவுடன் ஹேமந்த்திடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அந்த பணத்தையும் நகையையும் திருப்பி கேட்டால் அவர்கள் மிரட்டுகிறார்கள் என்று அர்த்தமா?

போட்டு தள்ளிய ஹேமந்த்
ஹேமந்த் ஏற்கெனவே பலரை போட்டுத் தள்ளியுள்ளார். இன்று இவர் நல்லவர் மாதிரி பேசுகிறார். அதிமுக ஆட்சியில் ஹேமந்திற்கு நண்பர்கள் இருந்தார்கள். பல பிரபல விஜேக்களை காதல் வலையில் வீழ்த்தி கடைசியில் இந்த அரசியல்வாதிகளுக்கு சப்ளை செய்வார் ஹேமந்த். அவ்வாறு சப்ளை செய்ததற்கு கிடைக்கும் பணத்தில் பப்புக்கு சென்று ஜாலியாக குடிப்பார்.

துக்கமே இல்லையே
ஜெயில்ல இருந்தும் பொண்டாட்டி செத்த துக்கமே முகத்தில் இல்லையே. ஜெயில்ல இருந்து வந்தும் இன்னும் திருந்தலை. அதாவது நாம் மாட்டிக் கொள்வோம் என்ற பயமும் கொஞ்சம் கூட இல்லாமல் ஹேமந்த் இருப்பது எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. இந்த தைரியத்தை இவருக்கு யார் கொடுக்கிறார்கள் என தெரியவில்லை.

11 பெண்களுடன் உல்லாசம்
ஹேமந்த் ஜெயில்ல இருந்து வெளியே வந்ததும் சித்ராவை அடக்கம் செய்த இடத்திற்குகூட செல்லவில்லை. 11 பெண்களுடன் உல்லாசம் அனுபவித்திருக்கிறார். அதுவும் சித்ரா கொடுத்திருந்த காசில்! பெண்களை பார்த்தவுடன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விடுவது ஹேமந்தின் வழக்கம். சித்ராவிடம் பேசும் போதும் எப்போதும் கட்டி பிடித்தபடிதான் பேசுவார். ஹேமந்த் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் என்னிடம் இருக்கிறது. ஆனால் எந்த பெண்ணும் முன் வந்து இவர் பிராடு என சொல்லமாட்டார்கள். இவ்வாறு ரேகா நாயர் பகீர் தகவலை அளித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications