Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அது என்ன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்.. பெயர் எப்படி வந்தது தெரியுமா? வந்தே பாரத்லாம் இப்போதான் பாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வந்தே பாரத் ரயில்களுக்கு முன்பாக இந்தியாவின் அதி நவீன சொகுசு ரயிலாக அறியப்பட்டது சதாப்தி ரயில்கள்தான் (Shatabdi Express). நாடு முழுக்க பல்வேறு வழித்தடங்களில் தற்போதும் இயங்கி வரும் இந்த சதாப்தி ரயில்கள் 90 களிலேயே பிரமிக்க வைக்கும் வசதிகளுடன் இயங்கின. இந்த ரயில்கள் இயக்கப்பட்டது எப்படி? பெயர்க்காரணம் உள்ளிட்டவற்றை இங்கே பார்க்கலாம்.

'சதாப்தி எக்ஸ்பிரஸ்' என்ற பெயர் வேகம், வசதி மற்றும் செயல்திறனைக் குறிப்பதாக உள்ளது. ஆனாலும், இதன் தோற்றம் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு செலுத்திய அஞ்சலியில் வேரூன்றியுள்ளது. அவரது 100வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், இந்த ரயிலுக்கு சமஸ்கிருத வார்த்தையான 'சதாப்தி' என்பதிலிருந்து பெயர் வந்தது. சதாப்தி என்றால் 'நூற்றாண்டு' என்று பொருள்.

shatabdi-express-how-india-s-century-train-got-its-iconic-name

நேருவின் நூற்றாண்டு விழா

1988ஆம் ஆண்டு அப்போதைய ரயில்வே அமைச்சர் மாதவராவ் சிந்தியாவால் முதல் சதாப்தி எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்திய ரயில்வேயின் முன்னேற்றம் மற்றும் நவீனமயமாக்கலின் அடையாளமாக இருந்தது. முதல் ரயில் புது டெல்லிக்கும் குவாலியருக்கும் இடையே இயக்கப்பட்டது. பின்னர் இச்சேவை போபால் வரை நீட்டிக்கப்பட்டது.

நேருவின் நூற்றாண்டு விழா 1989ஆம் ஆண்டு வருவதற்கு சற்று முன்னதாகவே இது தொடங்கப்பட்டது. 1986 முதல் 1989 வரை ரயில்வே அமைச்சராக இருந்த மாதவராவ் சிந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அதிவேக ரயில் அமைப்புகளை ஆய்வு செய்த பிறகு சதாப்தி எக்ஸ்பிரஸ் பற்றிய யோசனையை உருவாக்கினார்.

நவீன வடிவமைப்புடன்

அங்கு ரயில் சேவையில் கண்டறிந்த விரைவான இணைப்பு மற்றும் செயல்திறனால் ஈர்க்கப்பட்டு, இந்திய ரயில் பயணத்திற்கு ஒரு புதிய தரத்தை கொண்டுவரும் தொலைநோக்குப் பார்வையுடன் நாட்டிற்கு திரும்பினார் சிந்தியா. இதுவே சதாப்தி ரயிலை இயக்குவதற்கான முன்னோட்டமாக அமைந்தது. நவீன வடிவமைப்பு, அலுமினிய கவரில் சுடச்சுட உணவு வழங்கும் சேவை மற்றும் விரைவான பயணங்களுக்கான குறைந்தபட்ச ஸ்டாப்கள் ஆகியவையுடன் இந்த சேவை தொடங்கப்பட்டது.

நாட்டின் அதிவேக ரயில்

இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்தியாவின் அதிவேக ரயிலாக இருந்தது. மணிக்கு 140 கிமீ வேகத்தில் சென்றது. சில பிரிவுகளில் பின்னர் 150 கிமீ/மணி ஆக அதிகரிக்கப்பட்டது. அதன் வேகத்திற்கு அப்பால், இந்த ரயிலின் சிறப்பம்சங்கள் இந்திய ரயில் பயணத்திற்கு ஒரு புதிய வசதியை நிர்ணயித்தன. முழுமையாக குளிரூட்டப்பட்ட பெட்டிகள் பயணிகளுக்கு சீரான தட்பவெப்ப சூழலை வழங்கின.

இலவச உணவு, சிற்றுண்டி மற்றும் பானங்களை வழங்கியது. பிரத்யேக பகல் சேவை, இருக்கைகளுடன் கூடிய பகல்நேர ரயிலாக இயக்கப்பட்டது. படுக்கை வசதிகள் இன்றி இந்த ரயில் இயக்கப்பட்டது. குறைந்த நிறுத்தங்கள் முக்கிய நகரங்களுக்கு இடையே விரைவான பயண நேரத்தை உறுதி செய்தன.

சதாப்தியின் பாரம்பரியம்

சதாப்தி எக்ஸ்பிரஸ் அதன் காலத்தில் நகரங்களுக்கு இடையிலான பயணத்தில் புரட்சியை ஏற்படுத்தினாலும், அதைத் தொடர்ந்து வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற புதிய ரயில்கள் உருவாகியுள்ளன. வந்தே பாரத் ரயில்கள் தற்போது இந்திய ரயில்வேயின் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளன.

எனினும், சதாப்தியின் பாரம்பரியம் இன்றும் வலுவாக உள்ளது. இந்த ரயில் பெருநகரங்களை சுற்றுலா மற்றும் வணிக மையங்களுடன் இணைக்கும் ஒரு முக்கிய இணைப்பாக தொடர்ந்து செயல்படுகிறது. இதன் பெயருக்குப் பின்னால் உள்ள கதை, ஒரு தேசிய தலைவருக்கு செலுத்திய அஞ்சலி எவ்வாறு இந்திய போக்குவரத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக மாறியது என்பதை காட்டும் விதமாக அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+