வாரிசுதாரர்களுக்கு பெரிய ஷாக்! தந்தை உயிரோட இருக்கும்போதே சொத்து பங்கு கிடைக்குமா? ரகசியம் வெளியானது
சென்னை: பரம்பரை சொத்தில் பிள்ளைகளுக்கான உரிமைகள் உண்டா? ஒரு சொத்து நான்கு தலைமுறைகளாகப் பிரிக்கப்படாமல் என்னாகும்? ஒரு சொத்தின் மீது உரிமை கோருவதற்கு முன்பாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பதையெல்லாம் பொதுமக்கள் அறிந்து வைத்து கொள்ள வேண்டி உள்ளது.. அவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
பரம்பரைச் சொத்து விவகாரங்களில் பலரும் கவனிக்க தவறும் முக்கியமான விஷயம், பாகப்பிரிவினை (Partition) ஆகும். ஒரு சொத்து இந்து கூட்டு குடும்ப (HUF) சொத்தாக இருந்து, பிரிக்கப்படாமல் தலைமுறைகளாக வந்திருந்தால்தான் அது பரம்பரை சொத்தாகக் கருதப்படும்...

ஒருவேளை பாகப்பிரிவினை செய்யப்பட்டு, தந்தைக்கு கிடைத்த பங்கு அவருடைய தனிப்பட்ட சொத்தாக மாறும்.. அதாவது அது சுயார்ஜிதச் சொத்தாகவே கருதப்படும். இத்தகைய நுணுக்கமான மாற்றங்களைச் சாதாரண மக்கள் புரிந்துகொள்வது கடினம்.
பூர்வீக சொத்து - பாகப்பிரிவினை
அதனால் ஒரு சொத்தின் மீது உரிமை கோருவதற்கு முன்பாக அந்தச் சொத்தின் வில்லங்கச் சான்றிதழ் (EC), பட்டா மாறுதல் விவரங்கள் மற்றும் முந்தைய பாகப்பிரிவினை ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம். சட்டங்கள் எவ்வளவுதான் உரிமைகளை வழங்கினாலும், ஒரு குடும்பத்தின் அமைதி கெடாமல் அந்த சொத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது..
அதேபோல, Ancestral Property என்று சொல்லப்படும் பரம்பரைச் சொத்து , Self-acquired Property என்று சொல்லப்படும் சுயார்ஜிதச் சொத்து ஆகிய இரண்டிற்கும் இடையிலான சட்ட வேறுபாடுகளை மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம்.
பரம்பரை சொத்து
சட்டப்படி, ஒரு சொத்து பரம்பரைச் சொத்து என்று கருதப்படுவதற்கு, அது பொதுவாக இந்து கூட்டு குடும்ப (HUF) சொத்தாக இருந்து, பல தலைமுறைகளாக பிரிக்கப்படாமல் வந்திருக்க வேண்டும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.. 4 தலைமுறை' என்பது ஒரு பொதுவான விளக்கம் மட்டுமே, இறுதி முடிவு ஆவணங்கள் மற்றும் குடும்பப் பிரிவினை நிலையைப் பொறுத்தது.
இத்தகைய சொத்தில் ஒரு குழந்தை பிறந்த உடனே அதற்கு சமமான உரிமை கிடைத்துவிடுகிறது. 2005ம் ஆண்டின் சட்ட திருத்தத்திற்கு பிறகு, இதில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்பதை சுப்ரீம் கோர்ட் பல தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, அந்த சொத்து உண்மையில் பரம்பரைச் சொத்தாகவும், ஏற்கனவே பாகப்பிரிவினை செய்யப்படாததாகவும் இருந்தால், தந்தை உயிருடன் இருக்கும்போதே பிள்ளைகள் அதில் தங்களின் பங்கைக் கோர முடியும்.
சுயார்ஜித சொத்து
இருந்தாலும் நடைமுறையில் பலரும் குழப்பமடைவது சுயார்ஜிதச் சொத்து விஷயத்தில்தான். ஒரு தந்தை தனது சொந்த உழைப்பில் வாங்கிய சொத்து அல்லது பாகப்பிரிவினைக்கு பிறகு, அவருக்குக் கிடைத்த பங்கு பொதுவாக அவரின் தனிப்பட்ட சொத்தாகக் கருதப்படும்.. அதில் பிள்ளைகளுக்குப் பிறப்பால் உரிமை கிடையாது.
அத்தகைய சொத்துக்களை தந்தை தனது விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதி வைக்கவோ அல்லது விற்கவோ முழு அதிகாரம் பெற்றுள்ளார். தந்தை உயில் ஏதும் எழுதாமல் இயற்கை எய்தினால் மட்டுமே, அந்த சொத்து பிள்ளைகளுக்கு வாரிசுரிமை அடிப்படையில் வந்து சேரும்.
பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம்
எனவே, குடும்ப உறவுகளில் இவையெல்லாம் ஏற்படுத்தும் தாக்கத்தையும் கவனிக்க வேண்டும். சொத்துரிமை என்பது வெறும் காகித ஆவணம் மட்டுமல்ல, அது ஒரு குடும்பத்தின் பாதுகாப்பையும் சார்ந்தது. பிள்ளைகள் பிறப்பாலேயே உரிமை பெறுகிறார்கள் என்ற சட்டம், பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரத்தை வழங்கியுள்ளது. அதே சமயம், சொத்துக்காகப் பெற்றோரைத் துன்புறுத்தும் போக்குகளும் ஆங்காங்கே நிகழ்வதை மறுக்க முடியாது.
சட்ட நுணுக்கங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் தன்னிச்சையாக முடிவெடுப்பது சில நேரங்களில் தேவையற்ற நீதிமன்ற வழக்குகளுக்கு கொண்டு சென்றுவிடும்.. அதனால் ஒரு சொத்து உண்மையில் பரம்பரைச் சொத்தா அல்லது தந்தையின் தனிப்பட்ட சொத்தா என்பதை ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்துவது மிக முக்கியம்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications